‘முதல் இரவில்’ நீங்கள் என்ன செய்தீர்கள்…

டிம்பிள் குயின் என அழைக்கப்படும் கன்னட நடிகை ரசிதா ராம். இவர் நடித்து விரைவில் வெளிவர உள்ள படம் ‘லவ் யூ ரச்சு’. இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

‘லவ் யூ ரச்சு’ படத்தில் ‘தான் நடித்த காட்சிகள் மற்றும் கதை குறித்து ரசிதா ராம் விளக்கினார். கூட்டத்தில் நிருபர் ஒருவர் உணர்ச்சிகரமான காட்சிகளில் நடித்தது குறித்து கேள்வி எழுப்பினார்.

நீங்கள் உங்கள் முதல் இரவில் என்ன செய்தீர்கள் என ரசிதா நிருபரை நோக்கி கேள்வி எழுப்பினார். இதனால் நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து நடிகை ரசிதா இங்கே நிறைய பேர் கல்யாணம் ஆனவங்க இருக்காங்க. யாரையும் சங்கடப்படுத்தற எண்ணம் எனக்கு இல்லை. பொதுவாக, கல்யாணத்துக்குப் பிறகு என்ன செய்றாங்கன்னு சொல்றீங்களோ? என்ன செய்றாங்களோ?” என மறைமுகமாக கூறினார்.

ரசிதாவின் அதிர்ச்சியான கருத்துக்களில் இருந்து நிருபர்கள் மீண்டு வரும் போது, அவர்கள் காதல் செய்வார்கள், இல்லையா? அதுதான் படத்தில் காட்டப்படுகிறது என அவர் கூறினார்.

தொடர்ந்து நான் ஏன் இந்த காட்சிகளில் நடித்தேன் என்பது அது உங்களுக்கு படம் பார்க்கும் போது தெரியும் என கூறினார்.

நடிகையின் முதல் இரவு தொடர்பான கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் தேஜஸ்வி நாகலிங்கசாமி, ரசிதாவின் கருத்து மாநிலத்தின் கலாச்சாரத்திற்கு எதிரானது என்றும், மாநிலத்தின் புகழை கெடுத்துவிட்டதாகவும் கூறினார்.

“முதல் இரவு” குறித்து சர்ச்சை கருத்துக்கு நடிகை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட கிராந்தி தளம் கோரியுள்ளது மேலும் நடிகைக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபையிடம் கோரிக்கை வைத்து உள்ளது.

Related posts