17 சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒற்றைப் பனைமரம்’

17 சர்வதேச விருதுகளை வென்ற ‘ஒற்றைப் பனைமரம்’.

இலங்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ‘ஒற்றைப் பனைமரம்’ என்ற படம் தயாரானது. இது பல்வேறு சர்வதேச படவிழாக்களில் திரையிடப்பட்டு 17 விருதுகளை வென்றது.

‘மண்’ என்ற படத்துக்காக சிறந்த டைரக்டர் விருது பெற்ற புதியவன் ராசையாவின் இயக்கத்தில், இந்த படம் உருவானது. படத்தை பற்றி இவர் கூறுகிறார்:-

‘‘ஈழத்தில் போர் முடிவடைய இருந்த இறுதி நாட்களில், கதை ஆரம்பிக்கிறது. போராளிகளும், பொதுமக்களும் எதிர்கொண்ட ஒரு பிரச்சினைகளே திரைக்கதை. புதியவன் ராசையா, நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி.மாணிக்கம், ஜெகன், தனுவன் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.தணிகைவேல் தயாரித்துள்ளார். படம், ஓ.டி.டி. தளத்தில் வெளிவரும்.’’

Related posts