காதலால் எனக்கு கஷ்டம் வந்தது நடிகை மீரா நந்தன்

தமிழில் வால்மீகி, அய்யனார், சண்டமாருதம், சூரிய நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா நந்தன். மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு கோல்ட் காய் என்ற மலையாள படத்தில் கடைசியாக நடித்து இருந்தார். அதன்பிறகு படங்களில் நடிக்கவில்லை. தற்போது துபாயில் இருக்கிறார். கடந்த சில நாட்களாக அவர் அறைகுறை உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து வலைத்தளத்தில் புகைப்படங்கள் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் விமர்சித்தனர். அதற்கு பதில் அளித்த மீரா நந்தன் எனது ஆடைகளை வைத்து என்னை மதிப்பிட யாருக்கும் உரிமை இல்லை. எந்த மாதிரி ஆடைகள் அணிவது என்பது எனது விருப்பம் என்று தெரிவித்தார். மேலும் தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர் கூறும்போது, ‘இந்த இருபது வயதில் வாழ்க்கையை திரும்பி பார்க்கிறேன். அதில் நிறைய கற்றுக்கொண்டேன். சில முதல் அனுபவங்கள் இருந்தன. ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தேன். நடிகையாக தொடர்ந்தேன். பிறகு ரேடியோ ஜாக்கி ஆனேன். காதலில் விழுந்தேன். அதன்பிறகு கஷ்டப்பட்டேன். என்னை நேசிக்க கற்றுக்கொண்டேன். குடும்பம் முக்கியம் என்பதை உணர்ந்தேன்’ என்று கூறியுள்ளார்.

Related posts