ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வாழ்த்து

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஜோ பைடனுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில்,
வரலாற்று ரீதியிலான உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள். மேலும் எமது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த உங்களுடன் பணியாற்ற எதிர்பார்க்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், 290 தொகுதிகளை கைப்பற்றி 46வது ஜனாதிபதியாகவும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாகவும் பதவியேற்கவுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹரிசுக்கும் ஏனைய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
——
அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான 72 வருட கால இராஜதந்திர உறவினை மேலும் வலுப்படுத்துவதற்கு குறித்த இருவருடனும், இணைந்து பயணிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts