கொஞ்சமாக வருத்தப்படுங்கள்… நடிகர் ரஜினி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். ரஜினியின் 167-வது படமான தர்பாரில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் வரும் 9-ம் தேதி தர்பார் திரைப்படம் வெளியாகவுள்ளது.

தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ள தர்பாருக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது தர்பார் பட புரமோஷனில் தயாரிப்பு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பட ரிலீசுக்கு முன்பான நிகழ்ச்சி ஒன்று ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் ஏஆர் முருகதாஸ், நடிகர் ரஜினிகாந்த், நடிகை நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ரஜினி சந்தோஷமாக வாழ்வது எப்படி என தெரிவித்தார். மேடையில் பேசிய அவர் கூறியதாவது:-

எப்படி சுறுசுறுப்பாக இருக்கிறேன் என பலரும் என்னிடம் கேட்கிறார்கள். கொஞ்சமாக ஆசைப்படுங்கள், கொஞ்சமாக வருத்தப்படுங்கள், கொஞ்சமாக சாப்பிடுங்கள், கொஞ்சமாக தூங்குங்கள், கொஞ்சமாக உடற்பயிற்சி செய்யுங்கள், கொஞ்சமாக பேசுங்கள் இதை எல்லாம் செய்தால் சந்தோஷமாக வாழலாம் என தெரிவித்தார்.

பாகுபலி திரைப்படத்தை போல பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது என பாராட்டினார்.

——

ரஜினியின் தர்பார் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. அடுத்து சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இது ரஜினிக்கு 168-வது படம். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் உள்ள குடும்ப படமாக தயாராவதாக கூறப்படுகிறது.

இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கின்றனர். முத்து படத்துக்கு பிறகு 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் ரஜினியுடன் மீனா ஜோடி சேர்ந்துள்ளார். ரஜினி 2 பெண்டாட்டிகாரராக நடிப்பதாகவும் குஷ்பு, மீனா இருவரும் மனைவிகளாக வருகிறார்கள் என்றும் பேச்சு அடிபட்டது. குஷ்பு வில்லியாக வருகிறார் என்று இன்னொரு தகவலும் பரவியது.

இதனை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. ரஜினியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. பிரகாஷ்ராஜ், சூரி ஆகியோரும் உள்ளனர். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. முதல் கட்டமாக பாடல் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அடுத்து புனேயில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் தற்போது படத்தை ஆயுத பூஜையில் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில் நுட்ப பணிகள் செப்டம்பர் மாதத்துக்கு முன்பே முடிந்து விடும் என்பதால் தீபாவளிக்கு முன்னதாகவே திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Related posts