போதைப்பொருளுடன் இராணுவ லெப்டினன்ட் கைது

பொரலஸ்கமுவ பகுதியில் இராணுவ லெப்டினன்ட் ஒருவர் போதைப்பொருடன் கைது செய்யப்பட்டதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யுக்திய நடவடிக்கையின் போது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தள்ளது.

குருவிட்ட இராணுவப் படையணியில் கடமையாற்றும் லெப்டினன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .

அவரது காற்சட்டை பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Related posts