பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல்

பாலினச் சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகிய இரண்டு சட்டமூலங்களும் எதிர்வரும் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தின் தேசிய நிகழ்வில் இன்று வெள்ளிக்கிழமை (08) உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் சட்டம் நேற்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டதாகவும், பாலினச் சமத்துவச் சட்டம் அடுத்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

Related posts