ஆணைக்குழு சட்டமூலம் – எதிர்கட்சி கடும் அதிருப்தி

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் குறித்து எதிர்கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த சட்டமூலத்தினால் ஊடக சுதந்திரம் கட்டுப்படுத்தப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தி அச்சம் வெளியிட்டுள்ளது.

ஐக்கியமக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா உத்தேச சட்டமூலம் குறித்து அவநம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் நோக்கம் குறித்து அவர்கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த சட்டமூலத்தினால் நிகழ்நிலை மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படும் சூழ்நிலை உருவாகலாம் எனஅவர் தெரிவித்துள்ளார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் அரசாங்கம் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளமை குறித்து நம்பிக்கையின்மையை வெளியிட்டுள்ள ஹர்சடிசில்வா சமூக ஊடகங்களை ஒடுக்குவதே இதன் நோக்கம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் குறிப்பிட்ட குழுவொன்றிற்கு தொலைக்காட்சி உரிமங்களை வழங்குவதற்கு உதவலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமும் இலங்கை அரசாங்கத்தின் உத்தேச ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலமும் நடைமுறைக்குவந்தால் இலங்கை ஊடக உலகம் கறுப்பு உலகமாக மாறலாம் என ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts