நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம்

உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தின் பிரகாரம் சட்டமா அதிபர் திணைக்களம் உறுதிப்படுத்திய பின்னர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் நடவடிக்கை சட்டமாஅதிபர் திணைக்களம் சட்டவரைவாளர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதால் உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு மாறாக அல்லது அரசியலமைப்பிற்கு முரணாக செயற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் எவ்வாறான பரிந்துரைகள் புறக்ககணிக்கப்பட்டன என்பதை சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் தெரிவித்தால் உரிய அதிகாரிகள் அதற்கு பதிலளிப்பார்கள் மேற்குறிப்பிட்ட விடயங்களில் சபாநாயகருக்கு விருப்புரிமை இல்லை எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தின் செயல்முறையை நன்கு புரிந்துகொள்ளவேண்டியவர்கள் வேறுவிதமாக தெரிவிப்பது கவலையளிக்கின்றது சபாநாயகர் தனது விருப்பத்தின்படி சட்டங்களை இயற்றலாம் சட்டமூலங்களில் திருத்தங்களை செய்யலாம் என தெரிவிப்பது அவர்களின் ( குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின்) சட்ட அரசமைப்பு குறித்த அறிவை அவமதிக்கின்றது எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts