தைப்பொங்கலுக்கான பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம்

எதிர்வரும் திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகை கொண்டாத்தை முன்னிட்டு , யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது.

பொங்கல் பானைகள் , வெடிகள் , பழங்கள் , கரும்புகள் உள்ளிட்ட பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

15 ஆம் திகதி தைப்பொங்கல் பண்டியை தமிழர்களால் கொண்டாடப்படவுள்ள நிலையில், பொங்கல் பானை உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

அந்தவகையில் கொழும்பு ஐந்துலாம்பு சந்திப் பகுதியில் பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெறுகின்றது.

Related posts