தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கு

தாமரை கோபுரத்தை பார்வையிட வருவோரின் தொகை அதிகரித்துள்ளதாக தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தாமரை கோபுரம் பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டதில் இருந்து இதுவரையான காலப்பகுதியில் 14 இலட்சம் பார்வையாளர்கள் பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ளனர்.

அதில், வெளிநாட்டில் இருந்து இதுவரையில் 42,297 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.

நேற்று (24) தாமரை கோபுரத்திற்கு 7,522 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். அதில் உள்ளூரிலிருந்து 7,285 பார்வையாளர்களும், வெளிநாட்டிலிருந்து 237 பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டுள்ளனர்.

Related posts