கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

கம்பஹா பிரதேசத்தில் உள்ள நகை அடகுக் கடை ஒன்றில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அடகுக் கடையை திறக்கும் போது கூரிய ஆயுதங்களுடன் வந்த இருவர் கடை உரிமையாளரை அச்சுறுத்தி கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் 175 இலட்சம் பெறுமதியான நகைகள் மற்றும் 10 முதல் 15 இலட்சம் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts