வீடுகளுக்குள் புகுந்து குளியல் அறையிலுள்ள பெண்களை

யாழ்ப்பாணம், நீராவியடி பகுதியில் இரவு வேளைகளில் யாருக்கும் தெரியாமல் வீடுகளுக்குள் புகுந்து குளியல் அறையில் உள்ள பெண்களை கமரா மூலம் வீடியோக்களை எடுத்து, அவற்றைக் காட்டி வீட்டில் இருப்பவர்களை மிரட்டி வந்த மர்ம நபரொருவர் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, கைதான சந்‍தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபருக்கு எதிராக சில பெண்கள் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவில் முறைப்பாட்டை பதிவு செய்ததன் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதற்கமையவே சந்தேக நபரை கண்காணிப்பு கமரா உதவியுடன் கைது செய்த யாழ்ப்பாணம் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர், குறித்த நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் சிறுவர்கள், பெண்கள் பிரிவில் ஒப்படைத்தனர்.

அதனையடுத்தே யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சந்தேக நபர் முற்படுத்தப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts