கப்பம் கோரி தொலைபேசியில் அச்சுறுத்தல்

அம்பாந்தோட்டை – வலஸ்முல்லை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லொறி ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை மற்றும் கப்பம் கோரி தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்தமை உள்ளிட்ட குற்றத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் போதைப்பொருளுடன் வலஸ்முல்லை பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (10) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு செய்யப்பட்டவர்கள் பசுவத்தை மீதெனிய பிரதேசதை்தை சேர்ந்த 34 மற்றும் 35 வயது நபர்கள் ஆவர்.

தங்காலை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் சோதனையின் போது சந்தேக நபர்களிடம் இருந்து 05 கிராம் 450 மில்லிகிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் தங்காலை குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் வலஸ்முல்லை பொலிஸார் விசாரணைகளை மெற்கொண்டு வருகின்றனர்.

Related posts