பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழில்

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் யாழ்ப்பாணத்துக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24) வருகை தந்துள்ள நிலையில், அவரை ஈழத்தின் புகழ்பெற்ற நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தி குமரன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.

யாழ். கோண்டாவில் உப்புடம் விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து, மங்கள வாத்தியத்துடன் கோண்டாவிலில் அமைந்துள்ள சந்தோஷ் நாராயணன் மனைவியின் பூர்வீக இல்லத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சந்தோஷ் நாராயணன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் ‘யாழ் கானம்’ பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts