உலக சாதனை படைத்த 59 வயது இலங்கையர்

ஆயிரத்து 550 கிலோகிராம் எடை கொண்ட ஊர்தியை 7 நிமிடம் 48 செக்கன்களில் தனது தாடியால் இழுத்து, தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த செ. திருச்செல்வம் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த நிகழ்வானது, சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் (09) நேற்று பிற்பகல் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் இடம் பெற்றது.

இதில் 59 வயதான குறித்த நபர் 400 மீற்றர் தூரம் வரை ஊர்தியை இழுத்து சென்று சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Related posts