அச்சுவேலி சம்பவம் : மேலும் 24 பேர் கைது !

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை தாக்கி சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் மேலும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த குற்றச்சம்பவம் தொடர்பில் கைதானவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

கைதானவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில், கைதான 25 பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 9 பேர் எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி வரையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.

பெண்ணொருவரின் படங்களை கணினி ஊடாக செம்மைப்படுத்தி, சமூக ஊடங்களில் பதிவேற்றியதாக சந்தேகித்து கடந்த ஜுன் மாதம் 28ஆம் திகதி இரவு அச்சுவேலி நீர்வேலி பகுதியிலுள்ள சிலர், குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து அங்கிருந்த இரு இளைஞர்களை தாக்கியதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், அமைதியின்மையை கட்டுப்படுத்த வானைநோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts