விஷால் பிரம்மாண்ட விழா நடத்த முடிவு

நடிகர் விஜய், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஜூன் 17-ம் தேதி, கல்வி உதவி தொகை வழங்கினார்.
விழாவில் விஜய் பேசிய பேச்சு பரபரப்பானது. இதை போல நடிகர் விஷாலும் விழா ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.
நடிகர் விஷால், கடந்த சில வருடங்களாக தேவி அறக்கட்டளை மூலம் ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு வருடம் தோறும் உதவி செய்து வருகிறார்.
அவர் உதவியால் சுமார் 300 பேர், கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் நடத்தியது போல, உதவி பெறும் மாணவிகளையும் அவரது பெற்றோர்களையும் அழைத்து வந்து விழா நடத்த நடிகர் விஷால் திட்டமிட்டுள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அந்த விழாவில் விஷாலும் பரபரப்பாகப் பேச இருப்பதாகக் கூறுகின்றனர்.

Related posts