கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றை தந்திரம்

கடந்த 2016 நவம்பர் மாதம் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளில் பண மதிப்பிழப்பு செய்யப்பட்டது புதிதாக 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்பட்டன. தற்போது புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

இதனிடையே, நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டு செப்டம்பர் 30-ம் தேதி முதல் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் வங்கிகளில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இந்நிலையில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப்பெறும் நடவடிக்கையை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கர்நாடக தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததை மறைக்கவே 2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்பப்பெறும் நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 500 சந்தேகங்கள், 1000 மர்மங்கள், 2000 பிழைகள்! கர்நாடக படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்! 2 ஆயிரம் ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை’ என தெரிவித்துள்ளார்.

Related posts