சிவன் ஆலய பூசகர் உட்பட இருவர் கைது

பொலிஸரால் கைதுசெய்யப்பட்ட வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசகர் மற்றும் ஆலயநிர்வாக உறுப்பினர் வவுனியா

நீதிமன்றத்தால் நேற்று (11) விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா, வெடுக்குநாறிமலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த இறை விக்கிரகங்கள் அண்மையில் உடைத்து அழிக்கப்பட்டன.இதையடுத்து வவுனியா நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் மீண்டும் விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது.

எனினும், விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்ட போது நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொள்ளாது தொல்பொருட்களுக்கு சேதம் விளைவித்ததாக ஆலய பூசகரும், நிர்வாக உறுப்பினர் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைதனாவர்களை நெடுங்கேணி பொலிஸார் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

எனினும், வழக்கின் முறைப்பாட்டாளர்களாக ஆலய நிர்வாகமும் பூசகரும் இருப்பதால் அதே வழக்கில் அவர்களை சந்தேக நபர்களாக பெயரிடுவது வழக்குக்ஞ முரணாக அமையும். இதைச் சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், அவர்களை வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கோரினர். பொலிஸார் மற்றும் சட்டத்தரணிகளின் கருத்துக்கள் தொடர்பில் கவனம் செலுத்திய நீதிமன்றம், கைதான இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்தது.

அத்துடன், ஆலயத்தில் கட்டுமானங்களையோ மாற்றங்களையோ ஏற் படுத்தக்கூடாதென்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பூஜை வழிபாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

இதேவேளை விக்கிரகங்களை உடைத்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை விரைந்து எடுக்குமாறும் பொலிஸாருக்கு பணிக்கப்பட்டது.

வழக்கில் ஆலய நிர்வாகம் சார்பில், சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருஅருள் தலைமையிலான வவுனியா சட்டத்தரணிகள் குழாம் முன்னிலையாகியிருந்தனர்.

Related posts