வடக்கு, கிழக்கு எம்.பிக்களை ஜனாதிபதி சந்திப்பார்

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் நாளை வியாழன் மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நாட்களில் நடக்கவுள்ள சந்திப்புகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் தமிழ் எம்.பிக்களை ஒரே நேரத்தில் சந்திக்க ஜனாதிபதி ரணில் இணக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவுடன் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடந்த சந்திப்பின்போதே ஜனாதிபதி தரப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts