நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார்

தன்னைப் பற்றி விமர்சித்த தயாரிப்பாளருக்கு நடிகை சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படம் திரைக்கு வந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படத்தை ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுத்து இருந்தனர். ஆனால் இதுவரை ரூ.10 கோடி மட்டுமே வசூலித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைத்தளத்தில் சமந்தாவுக்கு எதிராக விமர்சனங்கள் கிளம்பின.

இந்த நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு, “சாகுந்தலம் படத்தோடு சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. கதாநாயகி அந்தஸ்தை இழந்து விட்டார். சகுந்தலை கதாபாத்திரத்துக்கு பொருத்தமில்லாத அவரை எப்படி தேர்வு செய்தார்கள்.

படத்தை ஓடவைக்க சமந்தா தனது உடல்நிலையை காரணம் காட்டி மலிவான விளம்பரங்கள் செய்தார்” என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கு காது மடல்களில் அதிகமாக முடி வளர்ந்து இருக்கும்.

அதை வைத்து சமந்தா பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைத்தளத்தில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், “காது மடலில் எதற்காக ஒருவருக்கு அதிக முடி வளர்கிறது என்று கூகுளில் தேடினேன்.

அதற்கு அதிகமான ஹார்மோன் சுரப்பதுதான் காரணம் என்று வந்தது. இது யார் என்பது உங்களுக்கு தெரியும்” என்று குறிப்பிட்டு சிட்டிபாபுவை விமர்சித்து உள்ளார்.

Related posts