காபி கோப்பையுடன் வித்யாபாலன்…!

2005-ஆம் ஆண்டு வெளியான ‘பிரினீதா’ படத்தின் மூலம் அறிமுகமானவர் வித்யா பாலன். ‘பா’, ‘கஹானி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் மறைந்த நடிகை சில்க் சிமிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘தி டர்ட்டி பிக்சர்’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

இப்படத்துக்குப் பிறகு நாயகியை மையமாகக் கொண்ட திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். டபூ ரத்னானியின் வருடாந்திர பிரபல போட்டோஷூட்டுக்காக வித்யாபாலன் கொடுத்து உள்ள போஸ் இணையத்தில் வைரலாகி உள்ளது.

ஒரு கையில் செய்தித்தாள் மற்றும் மறு கையில் காபி கோப்பையுடன் போஸ் கொடுத்து உள்ளார். ஆனால் ஆடை இல்லை. ஹீல்ஸ் மற்றும் சன்கிளாஸ் அணிந்து, செய்தித்தாளின் பின்னால் ஆடையின்றி இருப்பது போல் தெரிகிறது.

ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் முதல் ஹிருத்திக் ரோஷன் மற்றும் கரீனா கபூர் வரை டபூ ரத்னானி போட்டோஷூட் செய்து உள்ளார்.

இந்த நிலையில் வித்யா பாலன் அளித்துள்ள பேட்டியில், “நான் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கிறேன். எனது படங்கள் வருகிறது என்றாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

கமர்ஷியல் படங்களை தவிர்த்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிப்பதே எதிர்பார்ப்புக்கு காரணம். ஆனாலும் நான் எந்த மாதிரியான படங்களில் நடிக்க வேண்டும் என்பதில் எனக்கே இன்னும் ஒரு தெளிவு இல்லை.

மனதுக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து சினிமா பயணத்தை தொடர்கிறேன். என் மீது ஒரு முத்திரை குத்தி இமேஜ் வட்டத்துக்குள் வைத்து விட்டார்கள். கதாநாயகர்களுக்காகவே படங்கள் ஓடிய காலம் இருந்தது.

அதன் பிறகு கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் ஓடியதை பார்த்தோம். ஆனால் இப்போது ஹீரோ, ஹீரோயினை பார்த்து படம் பார்க்கும் காலம் மலையேறி விட்டது. படத்தில் நல்ல கரு இருந்தால்தான் ரசிகர்கள் பார்ப்பார்கள்” என்றார்.

Related posts