தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கே அரசு பணி

கவர்னர் உரை மீதான நன்றி தெர்விக்கும் மீதான் உரையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எந்தவித சமரசமுமின்றி ஆட்சி செய்து வருகிறோம்; திராவிட மாடல் ஆட்சி வெற்றி பெற்று வருகிறது.மக்கள் மனங்களில் மகிழ்ச்சி என்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கு.

காலை உணவு சாப்பிடும் குழந்தைகள், கட்டணமில்லா பயணம் செய்யும் மகளிர் முகத்தில் நாள்தோறும் உதயசூரியன் உதிக்கிறது. தமிழக மக்களின் நலன் என்றால் சொல்லாதையும் செய்வோம், சொல்லாமல் செய்வோம் இது தான் என் முழக்கம்.

ஒட்டுமொத்த தமிழகமும் உயர்ந்திருப்பதை அனைவராலும் பார்க்க முடிகிறது. சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகளை உள்ளடக்கிய திராவிட மாடல் ஆட்சி வீரத்துடனும், விவேகத்துடன் நடைபெற்று வருகிறது என்பதை தமிழ்நாடு மட்டுமல்ல, இந்திய துணை கண்டமே இப்போது உணர்ந்துவிட்டது. நாங்கள் மதவாதத்திற்குத் தான் எதிரானவர்கள், மதத்திற்கு அல்ல; சட்டம் ஒழுங்கு குறித்த குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் சொல்ல வேண்டும்.

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்வு. காலை உணவு சாப்பிடும் குழந்தைகள். கட்டணம் இல்லா பயணம் செய்யும் மகளிர் முகத்தில் நாள்தோறும் சூரியன் உதிக்கிறது.ஒட்டுமொத்த தமிழ்நாடும் உயர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது.

வடமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்கள் காவல்துறை மூலம் சேகரிக்கப்படுகிறது. குற்றச்செயலில் ஈடுபடுவோர் யார் என்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் மொழி கற்கும் சட்டத்தை 2006ல் கருணாநிதி கொண்டு வந்தார்.

அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதை அரசு கண்காணிக்கிறது. நமக்கு நாமே திட்டம் பேரூராட்சிகள், நகராட்சிகளிலும் விரிவு படுத்தப்படும். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை படிக்காமல் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற முடியாது.

10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடம் என்ற சட்டத்தை இயற்றி, மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார் கலைஞர். “அந்த வகையில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக இருப்பதை இந்த அரசு தொடர்ந்து கண்காணிக்கும்” தமிழ்மொழியில் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரசுப்பணிகளில் அமரமுடியாத வகையில் டிஎன்பிஎஸ்சி சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

தமிழியில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பத்தாரர்கள் தகுதி பெற்று பணியில் அமர்ந்திருந்தாலும், பணியில் சேர்ந்த தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

2020-21-ல் வாங்கப்பட்ட நிகர கடன் ரூ.88.275 கோடி. 2021-22 -ம் வாங்கப்பட்ட நிகர கடன் ரூ.79.333 கோடி. முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ.4 ஆயிரம் கோடி குறைவாக கடன் வாங்கியுள்ளோம்.கடும் நிதி நெருக்கடி இருந்த போதிலும் திறமையான நிர்வாகத்தால் கடனை குறைத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts