கவர்னர்கள் இருக்கும் இடம் தெரியாது

அனைத்து இடங்களிலும் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு குடும்ப அட்டை கொடுங்கள். ஆனால், வாக்காளர் அட்டை கொடுக்காதீர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

சென்னை, அனைத்து இடங்களிலும் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு குடும்ப அட்டை கொடுங்கள். ஆனால், வாக்காளர் அட்டை கொடுக்காதீர்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீமான் கூறியதாவது: ” நாடாளுமன்ற கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

இது அவருக்கு பெருமை அல்ல. இந்த நாட்டு மக்களுக்கு பெருமை.

வாக்குகாகத்தான் பாஜக அம்பேத்கரை கொண்டாடுகிறது. என்.எல்.சியில் வேலை வாய்ப்பு வேறு ஒருவருவருக்கு வழங்கப்படுகிறது. அதை எதிர்த்துப் போராடப்போகிறோம். அனைத்து இடங்களிலும் வடமாநிலத்தவர்கள் உள்ளனர்.

வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு குடும்ப அட்டை கொடுங்கள். ஆனால், வாக்காளர் அட்டை கொடுக்காதீர்கள். கவர்னர் 6-வது விரல். அதை வெட்டி எறிய வேண்டும். ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது கவர்னர் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா தொடர்பாக அரசு எடுக்கிற முடிவுக்கு கவர்னர் ஒத்துழைக்கவில்லை”என்றார்.

Related posts