மண்ணெண்ணெய் ரூ. 365; டீசல் ரூ. 430 ஆக அதிகரிப்பு

இன்று (12) முதல் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, மண்ணெண்ணெய் : ரு. 340 இலிருந்து ரூ. 25 இனால் அதிகரிப்பு – புதிய விலை ரூ. 365
டீசல்: ரூ. 415 இலிருந்து ரூ. 15 இனால் அதிகரிப்பு – புதிய விலை ரூ. 430

ஆயினும் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோல் ஒக்டேன் 92: ரூ. 370
பெற்றோல் ஒக்டேன் 95: ரூ. 510
சுப்பர் டீசல் (4 ஸ்டார் யூரோ 4) – ரூ. 510
தொழிற் பயன்பாட்டு மண்ணெணெண்ணெய் – ரூ. 464
இதே போன்று, LIOC எரிபொருட்களும் விலைகளும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக கடந்த ஒக்டோபர் 17 முதல் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் டீசல் விலைகள் முறையே ரூ. 40, ரூ. 15 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

அதற்கு முன்னதாக கடந்த ஒக்டோபர் 02 முதல் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் 95 விலைகள் முறையே ரூ. 40, ரூ. 30 இனால் குறைக்கப்பட்டிருந்தது.

ஓகஸ்ட் 22ஆம் திகதி மண்ணெண்ணெய் விலை ரூ. 253 இனால் அதிகரித்து ரூ. 340 ஆக மாற்றப்பட்டிருந்தது.

கடந்த ஓகஸ்ட் 02ஆம் திகதி முதல் டீசல் விலை ரூ. 10 குறைக்கப்பட்டு ரூ. 430 ஆக மாற்றப்பட்டிருந்தது.

Related posts