சினிமாவில் 17 ஆண்டுகள் நீடிப்பது மகிழ்ச்சி அனுஷ்கா

சினிமாவில் 17 ஆண்டுகள் நீடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் அனுஷ்கா சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் ஆகிறது.

இதையொட்டி அனுஷ்கா அளித்துள்ள பேட்டியில், ”நான் 17 ஆண்டுகளாக நடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய பேர் இதை நீண்ட பயணம் என்கின்றனர். ஆனால் இது மிகச் சிறியது.

நன்றாக உழைத்தால்தான் கதாநாயகிகள் சினிமா துறையில் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியும். அந்த நம்பிக்கையோடுதான் நான் ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்தேன். மற்றவர்கள் போல் நானும் எதிர்பாராமல் சினிமாவிற்கு வந்தேன்.

எனக்கு சினிமாவைப் பற்றிய எந்த புரிதலும் இல்லை.முதல் முறை கேமரா முன் நின்றபோது பயந்தேன். எனக்கு அந்த ஹீரோவுடன் நடிக்க வேண்டும் இந்த கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்றெல்லாம் பட்டியல் போட்டு பழக்கமில்லை.

நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று மட்டுமே ஆசைப்பட்டேன். நான் இத்தனை படங்களில் நடித்தாலும் அருந்ததி படம் தான் நம்பர் ஒன். எந்த நடிகையாக இருந்தாலும் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பது ஒரு சவால்தான்.

நான் ஒரு யோகா டீச்சர் ஆக வேலை செய்தேன் என்பது நிறைய பேருக்கு தெரியும். அதற்கு முன்பு ஒரு பள்ளியில் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுத்தேன்” என்றார்.

Related posts