பிடித்ததை செய்யுங்கள் பெண்களுக்கு மாதுரி தீட்சித் அறிவுரை

பிடித்ததை செய்யுங்கள் என பெண்களுக்கு மாதுரி தீட்சித் அறிவுரை வழங்கினார்.
இந்தி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மாதுரிதீட்சித் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்துவிட்டு, இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
மாதுரி தீட்சித் அளித்துள்ள பேட்டியில், ”நான் நடிகையான புதிதில் செட்டில் நான் ஒருத்தி மட்டும் தான் பெண்.
மேக்கப், இயக்குனர், கேமரா, லைட்டிங் என அனைத்து பிரிவுகளிலும் ஆண்களே பணியாற்றினர். இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டு பல பிரிவுகளில் பெண்கள் பணியாற்ற ஆரம்பித்துள்ளனர். நான் சினிமாவை விட்டு விலகியபோது.
இப்படி உச்சத்தில் இருக்கும்போது சினிமாவை விட்டு விலகியது பைத்தியக்காரத்தனம் என்று என்னை பலர் திட்டினர்.
பெண்கள் தொழில், குடும்பம் இரண்டையும் சமப்படுத்தி கொள்ள வேண்டும் நான் கேமரா முன்னால் நடிகை மட்டுமே.
வீட்டுக்கு சென்றால் என் குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறேன். என் தொழிலை திட்டமிட்டு கொண்டேன். அதனால் தான் என் குழந்தைகளை விட்டு நான் விலகிவிட்டேன்.
தூரமாக இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு வருவதே இல்லை.
சக பெண்களுக்கு நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன்.
நேரம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. பிடித்ததை செய்துவிடுங்கள். அதற்கேற்ற மாதிரி நிலைமைகளில் மாற்றம் அதுவாகவே வரும்” என்றார்.

Related posts