IMF இன் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியானது

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் செயற்குழு உடன்பாடு எட்டப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் சற்று நேரத்திற்கு முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

இதன்படி, எதிர்காலத்தில் இலங்கை 2.9 பில்லியன் டொலர்கள் விரிவான நிதியுதவி வசதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளதாக குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி 48 மாதங்களுக்கு செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts