எதிர்க்கட்சிகளால் செய்ய முடியாததை மக்கள் செய்துள்ளனர்

எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளால் செய்ய முடியாத ஒன்றை இந்த நாட்டு மக்கள் செய்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்ஷகளை விரட்டியடிக்க போராட்ட களத்தில் இருந்த மக்கள் பெரும் பணி செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விலகுவதே மக்களை வாயடைக்கச் செய்வதற்கான சிறந்த வழியாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

———-

ஜனாதிபதி நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், சிவில் செயற்பாட்டாளர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியில் அதனை முன்மொழியத் தயாராக இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நாளைய தினம் ஜனாதிபதி பதவி விலகியன் பின்னர் தற்போது மக்கள் வசம் உள்ள ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்ற தேசிய வளங்களை விடுவிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts