மீண்டும் நடிக்க வந்த சினேகா

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பிரசன்னாவுடன் ஜோடி சேர்ந்தபோது அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். கடைசியாக 2020-ம் ஆண்டு ஜனவரியில் வெளியான பட்டாஸ் படத்தில் தனுசுடன் நடித்து இருந்தார். அதன்பிறகு படங்களில் பார்க்க முடியவில்லை.

சினேகாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சினிமாவை விட்டு அவர் ஒதுங்கி விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். சமீபத்தில் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் 2 வருட இடைவெளிக்கு பிறகு சினேகா மீண்டும் படங்களில் தீவிரமாக நடிக்க தயாராகி உள்ளார்.

தமிழில் புதிய படமொன்றில் நடிக்கிறார். மலையாள படத்திலும் மம்முட்டி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மம்முட்டியுடன் துருப்பு குலான், த கிரேட் பாதர் ஆகிய படங்களில் நடித்து இருந்தார்.

Related posts