அத்துருகிரியவில் பதற்றம் – 6 பொலிஸார் காயம்!

அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெண் ஒருவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 6 பொலிஸார் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

——

ஐந்து நாட்களுக்குப் பின்னர் இன்று (18) பிற்பகல் பண்டாரகம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு தொகை பெற்றோல் கிடைத்துள்ளது.

எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்ற பெருமளவான மக்களுக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட போது அப்பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வெடிப்பு சம்பவத்துடன் அப்பகுதிக்காக மின்நாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அருகில் இருந்த மின்மாற்றியில் காகம் ஒன்று மோதியதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது தெரியவந்தது.

பின்னர், மின்சார சபை அதிகாரிகள் வந்து பழுதை சரிசெய்து மின் விநியோகத்தை சீரமைத்தனர்.

அதன்படி சுமார் அரை மணி நேரம் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts