ரஷ்ய விமானம் சற்று முன்னர் வெளியேறியுள்ளது.

இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் சற்று முன்னர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதைத் தடுக்கும் வகையில் கடந்த 2 ஆம் திகதி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற தடை உத்தரவை இடைநிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

Related posts