ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சிறப்புரிமையின் கீழ் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தைப் பறிக்க எவருக்கும் உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (19) சபாநாயகர் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களிடம் இருந்து கையடக்க தொலைபேசிகளை பறிக்கும் உரிமை எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை காப்பாற்ற நாம் பாடுபட வேண்டும். எனவே, தயவுசெய்து குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களை மன்னிப்பு கேட்கச் சொல்லுமாறு அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts