காலி வீதியில் கேஸ் சிலிண்டர் கோரி ஆர்ப்பாட்டம்

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி – மாபலகம வீதி கராப்பிட்டி சந்தியில் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சமையல் எரிவாயு சிலிண்டர் கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.

—-

கொழும்பு, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நான்காவது நாளாகவும் தொடர்கிறது.

நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமான இந்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இரவு பகலாக கூடாரங்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றிரவு (11) இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நடிகர்கள், கலைஞர்கள் உட்பட பெருந்தொகையான மக்கள் கூடியிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காலி முகத்திடலில் நேற்று இரவு கடும் மழை பெய்த போதிலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts