வெள்ளி தோறும் ஓர் சிந்தனை!

வெள்ளி தோறும் ஓர் சிந்தனை! இரட்சிப்பின் வசனம். 01. 04 202 ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம். அவரால் தம்மைத்தாமே ரட்சித்துக்கொள்ள முடியவில்லை ! மற்றவர்களை ரட்சித்தான், தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திரானியில்லை. மத்தேயு 27.42 கிராமங்களில் ஊழியம் செய்த போதகர் வாழ்வில் நடைபெற்ற ஓர் சம்பவத்தை இந்தவாரசிந்தனையாக எழுதுகிறேன். குறிக்கப்பட்ட போதகர் கிறிஸ்தவரல்லாத விவசாயி ஒருவரின் வீட்டில் குடியிருந்தார். இயேசுவைப்பற்றி அவரிடம்கூறி அவரை வழிநடத்த சரியான வேளைக்கு காத்திருந்தார். கடைசியாக ஒருநாள்அதிகாலையில் அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. தன்னுடன் கோழிக்கூட்டுக்கு வரும்படி அந்தவிவசாயி அவரைக் கேட்டுக் கொண்டான். அங்கே ஒரு கோழி அமர்ந்த நிலையில் இருந்தது.அதன் குஞ்சுகள் செட்டையின் கீழிருந்து வெளியே எட்டிப் பாரத்துக் கொண்டிருந்தன. ” அந்தக்கோழியைத் தொட்டுப்பாருஙகள் ” என்று விவசாயி போதகரிடம் கூறினான். அதைத்தொட்டுப்பார்த்த போதகர் அந்தக் கோழி செத்து விறைத்துப் போயிருப்பதைக்…