இந்தியாவுக்கு விரைவில் சீன வெளியுறவு அமைச்சர் பயணம்?

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி பேச்சுவார்த்தை நடத்த விரைவில் இந்தியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா – சீனா இடையே நிலவி வரும் எல்லை பிரச்சினை, ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் குறித்து விதாதம் நடத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி விரைவில் இந்தியப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனா காங்கிரஸ் கட்சியின் மாநில கவுன்சிலர்களில் ஒருவரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யி தெற்காசிய நாடுகளுக்கு ஒரு வார காலம் பயணம் செய்ய இருப்பதாகவும், அப்போது அவர் இந்தியா வருவார் என்றும், இதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்ப நிலையிலேயே உள்ளன என இருநாட்டு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீன வெளியுறவு அமைச்சர் இந்தியா வரும் பட்சத்தில், கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் லடாக் பகுதியில் இருநாட்டு எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ராணுவத் துருப்புகளை திரும்ப பெறுவதற்கான உடனடி தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும்.
ரஷ்யா -உக்ரைன் இடையே போர் நடந்து வரும் சூழலில், சீனா வெளியுறவு அமைச்சர், நேரடியாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்திக்க வருவதற்கு பின்னணியில் போர் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Related posts