இந்தியாவின் இஸ்ரேல் தூதர் இலங்கைக்கும் தூதராக நியமணம்..!

இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இஸ்ரேல் நாட்டின் சார்பில் தூதராக செயல்பட்டு வரும் நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சேவை, சந்தித்து அவரிடம் இதற்கான சான்றுகளை அளித்து அதிகாரப்பூர்வ இலங்கை – இஸ்ரேல் துதராக பதவி ஏற்றுக்கொண்டார்.

மேலும் நயோர் கிலான் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சேவையும் சந்தித்து பேசினார். இதுகுறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அவர், ‘இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்து பேசினேன்.

அப்போது விவசாயம், நீர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இன்னும் பல துறைகளில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம்’ என்று கூறியுள்ளார்.

Related posts