பகவந் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’ படக்குழுவினர் கைப்பற்றியதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது.
விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ படம், தெலுங்கில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று கூறப்பட்டது.
இதனை படக்குழு மறுக்கவில்லை என்பதால் இது உண்மையாக இருக்குமோ என கருதப்பட்டது.
தற்போது ‘பகவந்த் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’ படக்குழு கைப்பற்றியதன் காரணம் என்ன என்பது வெளியாகியுள்ளது.
‘பகவந்த் கேசரி’ படத்தில் பள்ளி குழந்தைகள் மத்தியில் பாலகிருஷ்ணா பேசுவது போன்று ஒரு காட்சி இருக்கும்.
அதில் ‘குட் டச், பேட் டச்’ குறித்து நீண்ட வசனம் ஒன்றை பேசியிருப்பார் பாலகிருஷ்ணா.
அந்த ஒரு காட்சிக்காகவே ‘பகவந்த் கேசரி’ ரீமேக் உரிமையை கைப்பற்றி இருக்கிறது ‘ஜனநாயகன்’ படக்குழு.
இப்படத்திலும் இதே போன்று ஒரு காட்சி இருப்பதால், பட வெளியீட்டு சமயத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கக் கூடாது என்பதே இதற்கு காரணம்.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.