லெவன்: திரை விமர்சனம்

முகமூடி அணிந்த ஒரு​வன் சென்​னை​யில் தொடர் கொலைகளைச் செய்​கிறான். கொல்​லப்​பட்​ட​வர்​களின் அடை​யாளம் தெரியக்​கூ​டாது என்ற நோக்​கத்​துடன் உடல்​களை எரித்​து​விடு​கிறான். இந்த வழக்கை விசா​ரிக்​கும் துணை கமிஷனர் அரவிந்​தன் (நவீன் சந்​தி​ரா), ஒரு சிறிய ஆதா​ரத்​தைக் கொண்​டு, கொலை செய்​யப்​படு​பவர்​கள் யார்? அவர்​களுக்​கிடை​யில் இருக்​கும் தொடர்பு என்ன என்​ப​தைக் கண்​டு​பிடிக்​கிறார். அவரால் அந்த கொலை​யாளியை நெருங்க முடிந்​ததா என்​பது கதை.

புலன் விசா​ரணைப் படங்​களில், கொலை​யாளி வரித்​துக் கொண்​டிருக்​கும் உளவியல் காரணம், கொலை செய்​யப்​படு​கிறவர்​களுக்கு அவனுடன் இருக்​கும் தொடர்பு ஆகியன நம்​பக​மாக​வும் ஆழமாக​வும் இருந்​தால் தவிர, அதில் பார்​வை​யாளர்​களின் மனம் ஈடு​பாடு காட்​டாது. இந்த அடிப்​படை​யான தர்க்​கத்​தில் நேர்​மை​யான ஈடு​பாட்​டைக் காட்​டி​யிருப்​பதுடன், ‘இரட்​டையர்​’களைக் கொண்டு பிளாஷ் பேக் கதையை வடிவ​மைத்த வித​மும் அதைப் படமாக்​கிய வித​மும் அபாரம் என்று சொல்ல வைக்​கிறது.

பொது​வாக இது​போன்ற கதைகளில், கொலை காட்​சிகளை ரத்​தக் களரி​யாகக் காட்டி முகம் சுளிக்க வைப்​பது​தான் இன்​றையப் போக்​கு. அதை அடியோடு தவிர்த்​து, கொலை​யாகி வருபவர்​கள் யார் என்​ப​தைக் கண்​டறி​யத் துடிக்​கும் காவல் அதி​காரி அரவிந்​தனின் தேடல் ஆர்​வத்​தை​யும் அவரது தனிப்​பட்ட குணப்​பாங்​கை​யும் கவனிக்க வைத்​து, இவர் உறு​தி​யாகக் கொலை​யாளியைக் கண்​டடை​வார் என்​கிற நம்​பிக்​கை​யை, காட்​சிகளின் வழி உரு​வாக்​கி, பார்​வை​யாளர்​களைப் படத்​துடன் ஒன்ற வைக்​கிறார் அறி​முக இயக்​குநர் லோகேஷ் அஜில்​ஸ்.

அதே​போல், பள்ளி நிர்​வாகி அபி​ராமியை, அரவிந்​தன் சந்​தித்த கையோடு கொலை​யாளி யார் என்​கிற ரகசி​யம் உடைந்​து​விடு​கிறது. ஆனால் அதன்​பின்​னும் அவனை நெருங்​கிக் கண்​டடைவ​தில் திரைக்​கதை​யில் இயக்​குநர் பொதிந்​திருக்​கும் அடுத்​தடுத்த திருப்​பங்​கள் அசரடிக்​கின்​றன. படத் தொகுப்​பாளர் ​காந்த் என்​.பி., இந்த த்ரில்​லர் திரைக்​கதை​யின் திருப்​பங்​களை​யும் கதா​பாத்​திரங்​களின் உளவியல் கோணல்​களை​யும் சரிவரப் புரிந்​து, அழகாகக் கோர்த்​துக் கொடுத்​திருக்​கிறார்.

சென்​னை, அதன் புறநகர்​களின் இரவைத் தன் நேர்த்​தி​யான ஒளியமைப்​பில் பதிவு செய்​திருக்​கிறார் கார்த்​திக் அசோகன். கொலை​யாளி​யின் முகமூடி​யில் தொடங்​கி, சின்​னச் சின்ன விஷ​யங்​களி​லும் கதைக் களத்​துக்​கான பொருத்​தப்​பாடுடன் கலை இயக்​கத்​தில் நேர்த்தி காட்​டி​யிருக்​கிறார் பி.எல்​.சுபேந்​தர். சஸ்​பென்ஸ் த்ரில்​லர் படத்​துக்​கு தர​மான பின்​னணி இசையைத் தந்​திருக்​கிறார், டி.இ​மான்.
அரவிந்​த​னாக வரும் நவீன் சந்​தி​ரா, மனோக​ராக வரும் திலீபன், சாந்​தி​யாக வரும் அபி​ராமி, சஞ்​ச​னா​வாக வரும் ரியா ஹரி, தாரா​வாக வரும் ரித்விகா என அத்​தனைப்​பேரும் கதா​பாத்​திரங்​களாக உணர வைத்​திருக்​கிறார்​கள்.

கதை சொல்​லலில் மெல்​லோட்​டம், கதா​பாத்​திர எழுத்​து, காட்​சி​யமைப்​பில் அழுத்​தம், அசரடிக்​கும் திருப்​பங்​கள் என இறு​திவரை ஈர்க்​கும் இந்​தப் படத்​தில் வரும் சீரியல் கில்​லரின் மீதும்​ இரக்​கத்​தை வரவழைக்​கிறது, இந்​த அசத்​தலான முயற்​சி.

Related posts