வடக்கில் கொலையுண்ட ஊடகவியலாளர்கள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை
July 30, 2010
வடக்கில் இடம்பெற்ற ஊடகவியலாளர் களின் படுகொலைகள் தொடர்பான தகவல்கள் ஊடாக அமைச்சுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் கிடைக்க வில்லை. அவ்வாறு தகவல்கள் கிடைக் கப் பெறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர் களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங் குவது தொடர்பாக ஆராயப்படும். இவ்வாறு ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற் பாட்டில் தெற்கு நோக்கிச் சென்றிருக்கும் வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களை கொழும்பில் உள்ள அமைச்சின் அலுவ லகத்தில் சந்தித்து அமைச்சர் கலந்துரை யாடினார்.
அண்மைக் காலங்களில் வடக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவ தற்கு ஊடகத்துறை அமைச்சு நடவ டிக்கை ஏதும் எடுத்துள்ளதா என்று ஊட கவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு: வடக்கில் உள்ள ஊடகவியலாளர்கள் பல்வேறு மன அழுத்தங்களுக்கு உள்ளாகி உள்ளார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். அந்த வகைளில் அவ்வாறான ஊடகவியலாளர்கள் இங்கு வருகை தந்துள்ளமையிட்டு மகிழ்ச்சியடை கின்றேன்.
ஊடகவியலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு பல்வேறு நடவடிக் கைகளை ஊடகத்துறை அமைச்சு மேற் கொள்ளவுள்ளது. சுமார் ஒரு லட்சம் ரூபா வரை ஊடகவியலாளர்களுக்கு கடன் அடிப்படையில் வழங்கத் தீர்மானித் துள்ளது. அந்தக் கடனைப்பெற்றுக் கொள்ள ஊடாகவியலாளர் சங்கங்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
அத்துடன் வடக்கில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்கள் உடனடியாக அகற்றப்படமாட்டா. நாட்டின் தேசிய நல னைக் கருத்தில் கொண்டு படிப்படி யாகவே அது அகற்றப்படும் என்றார்.





Comments
Got something to say?
You must be logged in to post a comment.