இலங்கைக்கான பயண எச்சரிக்கையை பிரித்தானியா அகற்றியுள்ளது
July 30, 2010
இலங்கையின் வடக்கு பிரதேசங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு பயணிப்பதற்கான பாதுகாப்பு ஆலோசனையை பிரித்தானியா அகற்றியுள்ளது.
இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானிகர், மார்க் கூடிங் தலைமையிலான குழுவினர் கடந்த மாதம் வடப்பகுதியின் குறித்த பிரதேசங்களுக்கு மேற்கொண்ட விஜயத்தை தொடர்ந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிரித்தானியா உயர்ஸ்தானிகம் தெரிவித்துள்ளது.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.