இன்று மாலைக்குப் பிறகு கருத்துக் கணிப்புகள் வெளியிடக்கூடாது
March 24, 2010

தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள செய்தியில், பென்னாகரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த தேர்தல் தொடர்பாக கருத்துக் கணிப்புகள் வெளியிடுவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன.
அதாவது 25-ந் தேதி இன்று மாலை 5 மணிக்குப் பிறகு தொலைக்காட்சி, இண்டர்நெட், ரேடியோ, இண்டர்நெட் டிவி, கேபிள் டிவி, செல்போன் அல்லது பத்திரிகைகள் உள்பட எந்த வகையிலும் கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது.
இதுபோல், தேர்தல் நடைபெறும் நாளன்று (மார்ச் 27), ஓட்டு போட்டுவிட்டு வருவோரிடம் காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இதை யாராவது மீறினால் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.




Comments
Got something to say?
You must be logged in to post a comment.