Top

திருச்சி டாஸ்மாக் பாரில் ரகளை செய்த இலங்கை நபர்கள் 7 பேரிடம் விசாரணை

March 23, 2010

திருச்சி டாஸ்மாக் பாரில் ரகளையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஏழு இலங்கை தமிழ் இளைஞர்கள், வெளிநாடு செல்ல உதவி கேட்டு, சில முக்கிய நபர்களை சந்திப்பதற்காக திருச்சி வந்ததாகச் சொன்னதால், போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி கே.கே.நகரில் உள்ள டாஸ்மாக் பாரில், இரண்டு நாட்களுக்கு முன் தகராறில் ஈடுபட்ட ஏழு பேரை, போலீசார் கைது செய்தனர். ஏழு பேரும், இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். ஆனால், அவர்களிடம் முறையான ஆவணங்கள் இல்லை. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வருவதாகக் கூறிய அவர்கள், திருச்சியில் தனி வீடு எடுத்துத் தங்கியிருப்பதாகவும் கூறினர். போலீசார் அவர்களை, திருச்சி சிறையில் அடைத்து விட்டனர்.

அவர்கள் கூறியதாவது: இலங்கைத் தமிழர்களுக்கு, ஆஸ்திரேலியாவில் குடியுரிமை வழங்குகின்றனர். அதை வாங்கித் தருவதாக, திருச்சியில் தங்கியுள்ள இருவர் கூறினர். அவர்களை சந்திக்கவே திருச்சி வந்தோம். நாங்கள் வந்து ஒரு வார காலம் ஆகி விட்டது. எனினும், எங்களுக்கு டிக்கெட், விசா எதுவும் வழங்கப்படவில்லை. அதனால் தான், டாஸ்மாக் பாரில் முக்கிய நபர்களின் சார்பாக பேச வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இவர்களுடைய நண்பரான வக்கீல் ஒருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom