Top

வெலிக்கட சிறையில் ஆயுள் கைதிக்கு திருமணம்

March 19, 2010

இலங்கையின் வெலிக்கட உயர் பாதுகாப்பு சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் கைதியான ராமையா ரவீந்திரன், சிறையதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகள் நல்லாசிகளுடன், சிறைக்குள்ளேயே தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். சிறையின் கண்காணிப்பாளரின் ஏற்பாட்டில் இந்த திருமணச் சடங்கு நடந்துள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்துவரும் மணமகனான ராமையா ரவீந்திரனுக்கு 2004ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

எதேச்சதிகாரச் சட்டம் என்று தாங்கள் கருதும் இலங்கையின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அநியாயமாக கைதுசெய்யப்பட்டவர் இவர் என்று இவரது விடுதலைக்கு ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

‘பயங்கரவாத’ முத்திரை குத்தப்பட்டிருந்தாலும், ரவீந்திரன் செய்த குற்றம் என்பது தானும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேறு சிலரும் சேர்ந்து நடத்திய ஒரு வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது, நீர்த் தேக்கத் தொட்டி ஒன்றை சேதப்படுத்தியது தான் என்று அவரது விடுதலைக்காக குரல்கொடுத்துவரும் இடதுசாரி அரசியல்வாதி விக்ரமபாகு கருணரத்ன கூறுகிறார்.

ஆனால் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்களே இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிசார் சார்பாகப் பேசவல்ல அதிகாரி ப்ரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

Comments

Got something to say?

You must be logged in to post a comment.

Bottom