<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Alaikal</title>
	<atom:link href="http://www.alaikal.com/news/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.alaikal.com/news</link>
	<description>Just another WordPress weblog</description>
	<lastBuildDate>Fri, 30 Jul 2010 15:09:46 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.0</generator>
		<item>
		<title>உன்னதத்தின் ஆறுதல்! பாகம் 30. சந்தேகமும் அழிவும். Pas. Francis T. Anthonypillai.</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43672</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43672#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 15:09:46 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[Other News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43672</guid>
		<description><![CDATA[உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து, அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். மத்தேயு 14:31. சந்தேகம் என்பது பயங்கரமான ஒன்றாகும். இன்று பலருடைய வாழ்க்கையின் சந்தோசத்தை அழித்து, பலருடைய வாழ்கையை நாசமாக்கியுள்ளதும் இந்த சந்தேகம் தான். அன்று பேதுருவிற்கு வந்த சந்தேகம் அவனை கடலுக்குள் அமிழ்துபோக வைத்தது. ஆனால் இயேசு கூட இருந்ததினால் அவன் காப்பாற்றப்பட்டான். வசனம் 28-31. பேதுரு அவரை நோக்கி, ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து, அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். மத்தேயு 14:31.</p>
<p>சந்தேகம் என்பது பயங்கரமான ஒன்றாகும். இன்று பலருடைய வாழ்க்கையின் சந்தோசத்தை அழித்து, பலருடைய வாழ்கையை நாசமாக்கியுள்ளதும் இந்த சந்தேகம் தான். அன்று பேதுருவிற்கு வந்த சந்தேகம் அவனை கடலுக்குள் அமிழ்துபோக வைத்தது. ஆனால் இயேசு கூட இருந்ததினால் அவன் காப்பாற்றப்பட்டான். வசனம் 28-31. பேதுரு அவரை நோக்கி, ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான்.</p>
<p> அதற்கு அவர், வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின் மேல் நடந்தான்.  காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில், ஆண்டவரே, என்னை இரட்சியும்(காப்பாற்றும்) என்று கூப்பிட்டான்.  உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து, அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அதே வேதம் புலம்பல் 3:57ல்  சொல்கிறது,  நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி, பயப்படாதே என்றீர். எமக்கு ஏற்படும் சந்தேகத்தால் அழிவு, இழப்பு, தோல்வி வரும் போது நாமும் தேவனை நோக்கி கூப்பிடும் போது அவர் எங்களை அணுகி, எல்லாப் பயங்களையும் நீக்கி, எங்களை மீட்டு, ஆறுதலைத்தருவார். </p>
<p>ஆனால் அன்று ஏவாளுக்கு வந்த சந்தேகம், இன்று முழு மனுக்குலத்தையும் பாவத்திற்குள் மூழ்கவைத்து, முழு மனுக்குலத்தையும் அழிவின் பாதைக்குள் இட்டுச்செல்வதைக் காணக்கூடியதாக உள்ளது. இதை நாம் விளங்கிக்கொள்ள ஆதியாகமம் 2ம், 3ம் அதிகாரத்தை வாசிக்கவும். தேவன் அவர்கட்கு இட்ட கட்டளை,  தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி, நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்;. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம். அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். </p>
<p>ஆனால் பிசாசானவன்  அந்தக் கனியைக் குறித்து ஏவாளிடத்தில் சொல்லும் போது,   அப்பொழுது சர்ப்பம் ஸ்திhPயை நோக்கி, நீங்கள் சாகவே சாவதில்லை, நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. ஆதி. 3:4-5. தேவனுடைய கட்டளை மேல் சந்தேகம் கொண்டு அந்தப்பழத்தை புசித்தார்கள்.  அவர்கள் கண்கள் திறக்கப்பட்டது. ஆனால் தேவ சந்நிதியை விட்டு ஓடி ஒளிந்து கொண்டார்கள். வசனம் 8. காரணம் தேவனுடைய மகிமை என்கிறதான அலங்காரம், பாதுகாப்பு அவர்களை விட்டு விலகியதுடன் தாங்கள் நிர்வாணிகள் என்பதை உணர்ந்து ஒளிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. </p>
<p>இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது தேவனுடைய வார்த்தையின் மேல் சந்தேகம் கொண்டால் நாமும் விலகி ஒட வேண்டியதுதான் (அதாவது தேவபராமரிப்பை இழந்து ஜீவனம் நடத்துதல்).<br />
அன்று எப்படி பிசாசானவன் ஏவாளிடம் தேவனுடைய வார்த்தைமேல் சந்தேகம் கொள்ளும் படி செயற்பட்டானோ அதே போல் இன்றும் செயற்படுகிறான். உதாரணமாக யாத்திராகமம் 20:3ல்  என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். இது தேவனின் கட்டளை. ஆனால் அந்த வார்த்தையின் மேல் உலகம் சந்தேகப்படுவதனால் இன்று கோடிக்கணக்கான தேவர்கள் நாளுக்கு நாள் உண்டாக்கப்பட்டு வருகிறதை நாம் காணக்கூடியதாக உள்ளது. </p>
<p>அதனால் மனித சமுதாயம் சீரளிக்கப்பட்டு வருவதோடு அல்லாமல், இயற்கையும் சீரளிக்கப்பட்டு முழு உலகமும் அழிவை நோக்கிச் செல்வதை நாம் கண்டுணர்ந்து கொள்ளக்கூடியதாக உள்ளது. அன்று ஏதேனில் தேவபிரசன்னத்தோடு ஆரம்பமான இன்பமான மனித வாழ்வு, தேவவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட சந்தேகத்தினால் சபிக்கப்பட்ட பூமியில் வாழ்வு தொடரப்பட்டது. இன்றும் அதே வாழ்வு தொடரப்பட்டு வருவது மிக வேதனைக்குரியது. இதை உணர்ந்த தேவன் பழையஏற்பாட்டுக் காலத்தில் மோசேயைக் கொண்டு அடிமைத்தனத்தில் இருந்த மக்களை மீட்டெடுத்தார். 2010 வருடங்களுக்கு முன்னர் இயேசுக்கிறீஸ்த்துவை அனுப்பி மக்களை மீட்டெடுத்தார்.</p>
<p>பிரியமானவர்களே, நமது மானிடவாழ்விலும் சந்தேகங்கள் அருமையான, இனிமையான வாழ்வை சீரளித்துவிடும் என்பதை ஒரு நாளும் மறவாதே. விசேடமாக பிசாசானவன் தேவவார்த்தையின் மேல் கொண்டுவரும் சந்தேகம் தேவனை விட்டு விலகுவதற்கு மட்டுமல்ல, முழுக்குடும்பத்தையும் சாபமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் என்பதை ஒருநாளும் மறவாதே. ஆகவே தேவனுடைய வார்த்தையை அறிய உங்களுக்குக் கிடைக்கும் சர்ந்தப்பத்தை உதாசீனம் பண்ணாதே, மாறாக அதை அறிய முற்படு. அதனால் வரும் ஆசீர்வாதமான வாழ்க்கையை அடைந்து கொள்ள மறவாதே.</p>
<p>இதை நீங்கள் அறிந்து கொள்ள இந்த வேதப்பகுதியைப் படியுங்கள. லூக்கா 16:19-31 .ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்@ அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். லாசரு என்னும் பேர்கொண்ட ஒருதரித்திரனும் இருந்தான், அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான், நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவது}தரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். </p>
<p>பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, து}ரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். அப்பொழுது அவன், தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும், இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். அதற்கு ஆபிரகாம், மகனே, நீ ப10மியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள், இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். </p>
<p>அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து  உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்பொருட்டு, நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். ஆபிரகாம் அவனை நோக்கி, அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன், அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். அதற்கு அவன், அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.</p>
<p>இது இயேசு கூறிய கதை. ஏன் இந்த ஐசுவரிவான் நரகத்திற்குச் சென்றான்? இதுதான் இந்தக் கதையின் சாரம்சம். இந்த உலகத்தில் பணக்காரணாக வாழ்ந்தாலும் பரலோகம் போக முடியாது. அதே நேரம் ஏழையாக வாழ்ந்தாலும் பரலோகம் போகமுடியாது. இதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். ஒருநாள் இருவரும் மரித்தார்கள். ஏழை ஆபிரகாம் மடியில் தேவதூதர்களால் கொண்டு போய்விடப்பட்டான். பணக்காரன் அடக்கம் செய்யப்பட்டான். அக்கினிக்கடல் என்று சொல்லப்படும் நரகத்தில் இருந்து ஆபிரகாம் மடியில் இருக்கும் அந்த ஏழை மனிதனைக் கண்டான். தனது தாகத்தைத் தீர்ப்பதற்கு ஒரு சில துளி தண்ணீர் கேட்டான். உதவி பெற முடியாத நிலை. அது மட்டுமல்ல நரகத்திற்கும் பரலோகத்திற்கும் மிகப் பெரிய இடைவெளி. அதை விட அவனின் வேதனை தனது ஐந்து சகோதரர்கள் பற்றியது. அவர்களும் இந்த இடத்திற்கு வந்து வேதனைப் படப்போகிறார்களே என்று. காரணம் அவன் சம்பூரணமாக வாழ்ந்த போது தேவ வார்த்தைக்கும், தேவ ஊழியக்காரருக்கும் செவி கொடாமல் சந்தேகத்துடன் வாழந்ததுதான். வசனம் 29-31. நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். </p>
<p>ஆபிரகாம் அவனை நோக்கி, அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவி கொடுக்கட்டும் என்றான். அதற்கு அவன், அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான்.  அதற்கு அவன் அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார். மோசேய் என்றால் தேவனுடைய வார்த்தை. தீர்க்கதரிசிகள் என்றால் தேவனுடைய ஊழியக்காரர்கள்.  இயேசுக்கிறீஸ்த்துவை சொந்த இரட்சகராக, பாவங்கள் சாபங்களில் இருந்து விடுதலை கொடுத்து பரலோக வாழ்வுக்கான வழியைக் காட்டும் தெய்வம் என்று ஏற்றுக்கொள்ள சந்தேகப்படும், மறுக்கும் மக்களின் முடிவைப்பற்றியதுதான் இதன் விளக்கம்.</p>
<p>வேதம் சொல்கிறது, 1 சாமுவேல்15:22இல் கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப் பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவி கொடுத்தலும் உத்தமம். தேவனுக்குப்பிரியமான பிள்ளைகளே, எங்களின் வாழ்வின் ஓட்டத்தின் முடிவு எங்கே முடியும் என்று சிந்திப்போம். ….இந்த எமது முடிவு பரலேகத்தை (நித்திய ஜீவனை, பாதுகாப்பான இடம்) நோக்கியதா? அல்லது நரகத்தை (அக்கினிக்கடலை) நோக்கியதா?</p>
<p>  இன்று முதல் இயேசுக்கிறீஸ்த்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, தேவனுக்கும், தேவனுடைய சத்தத்திற்கும் கீழ்ப்படிந்து நடக்க ஒப்புக்கொடுக்க விரும்பும் மக்கள் என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை அறிக்கை பண்ணுங்கள். அன்பின் இயேசு சுவாமி, இன்று உம்முடைய சத்தியம் எனது இருதயத்தின் கண்களை பிரகாசிக்கப் பண்ணியதற்காக உமக்கு கோடி நன்றிகள் அப்பா. சத்துருவானவன் கொண்டுவரும் சகல சந்தேகங்களுக்குள் நான் அகப்பட்டு விழுந்து, நீர் தந்த இனிய வாழ்வை கெடுத்துப்; போகாத படி உமது கிருபையால் என்னைத் தாங்கி வழி நடத்தும். எது அவசியம் என்று தெரியாமல் இது வரை வாழ்ந்துவிட்டேன். இன்று முதல் உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து வாழ்வதே உத்தமம்  என்று எண்ணி வாழ என்னை ஒப்புக்கொடுக்கிறேன் பிதாவே ஆமேன். கர்த்தர் உங்கள்  அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.</p>
<p>Pas. Francis T. Anthonypillai.  Rehoboth Ministries  &#8211;   Praying for Denmark.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43672</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சீமான் கைதுக்கும் இயக்குநர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை  பாரதிராஜா விளக்கம்</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43669</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43669#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 15:02:54 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[World News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43669</guid>
		<description><![CDATA[தமிழ் இயக்குநர்கள் சங்கத்திற்கு 40 வயது ஆகப்போகிறது. இதை முன்னிட்டு 40 வது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் விழா அறிவிப்பு கூட்டம் இன்று சென்னை பிலிம்சேம்பரில் நடந்தது. இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா உட்பட அனைத்து இயக்குநர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு யார் தலைமையேற்பார். திமுகவா? அதிமுகவா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘’இது அரசியல் விழா அல்ல’’என்று பதிலளித்தார் பாரதிராஜா. சீமான் சிறையில் இருக்கிறார். இயக்குநர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/seeman101.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/seeman101.jpg" alt="" title="seeman10" width="200" height="150" class="alignnone size-full wp-image-31478" /></a></p>
<p>தமிழ் இயக்குநர்கள் சங்கத்திற்கு 40 வயது ஆகப்போகிறது.  இதை முன்னிட்டு 40 வது பிறந்த நாள் விழாவை மிகச்சிறப்பாக கொண்டாட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் விழா அறிவிப்பு கூட்டம் இன்று சென்னை பிலிம்சேம்பரில் நடந்தது.</p>
<p>இயக்குநர் சங்க தலைவர் பாரதிராஜா உட்பட அனைத்து இயக்குநர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த விழாவுக்கு யார் தலைமையேற்பார்.  திமுகவா? அதிமுகவா?  என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,  ‘’இது அரசியல் விழா அல்ல’’என்று பதிலளித்தார் பாரதிராஜா.</p>
<p>சீமான் சிறையில் இருக்கிறார்.  இயக்குநர் என்கிற முறையில் அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா? அவர் விடுதலை ஆவதற்கு இயக்குநர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? அவர் கைது பற்றி என்ன நினைகிறீர்கள்? என்று சரமாரியாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். பாரதிராஜா,  ‘’சீமான் கைது பற்றி நான் எதுவும் கருத்து சொல்ல விரும்பவில்லை.  அவர் கைதுக்கும் இயக்குநர் சங்கத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.  </p>
<p>அவரின் கைது விவகாரம் கட்சி ரீதியானது.  அவர் அதை கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்.  அவர் இந்த விழாவில் பங்கேற்பாரா இல்லையா என்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது’’என்று தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43669</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எங்களை கொன்றுவிடுங்கள் ஈழத்தமிழர்கள் கண்ணீர்</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43666</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43666#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 15:00:00 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43666</guid>
		<description><![CDATA[இலங்கைத் தமிழர் பகுதிகளில், இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளா சாந்தபுரம் மக்கள், அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யும்படியும், இல்லை என்றால் கொன்றுவிடுமாறும் இலஙகை அரசிடம் கூறுங்கள் என, இலங்கை கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, இலங்கை தமிழர் இணையதளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது,இலங்கைத் தமிழர் பகுதியான சாந்தபுரம், இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி மக்களை மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு 2 மாதங்களாகியும் இதுவரை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. இந்நிலையில் கூட்டமைப்பின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/santha.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/santha.jpg" alt="" title="santha" width="500" height="330" class="alignnone size-full wp-image-43667" /></a></p>
<p>இலங்கைத் தமிழர் பகுதிகளில், இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாமல் வைக்கப்பட்டுள்ளா சாந்தபுரம் மக்கள், அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யும்படியும், இல்லை என்றால் கொன்றுவிடுமாறும் இலஙகை அரசிடம் கூறுங்கள் என, இலங்கை கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, இலங்கை தமிழர் இணையதளத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன.</p>
<p>இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது,இலங்கைத் தமிழர் பகுதியான சாந்தபுரம், இந்துபுரம் மற்றும் திருமுறிகண்டி மக்களை மீள்குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு 2 மாதங்களாகியும் இதுவரை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. </p>
<p>இந்நிலையில் கூட்டமைப்பின் எம்.பி.க்களான சி.ஸ்ரீதரன், சுரேஷ்பிரேமச்சந்திரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கிளிநொச்சியின் சாந்தபுரத்தில் தற்போது தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை 29ந் தேதி சந்தித்தபோது அங்குள்ள மக்கள் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,</p>
<p>“கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் மீள்குடியேற்றத்திற்காக அழைத்தவரப்பட்டும், இதுவரை அடற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில் அங்குள்ள பள்ளிக்கூடங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>குடிக்கத் தண்ணீர் இல்லை, தொழில் இல்லை, நிம்மதியான வீடில்லை என்ற நிலையில் கொடுக்கப்படுகின்ற நிவாரணத்தை மட்டும் நம்பி அந்த மக்கள் வாழ்கின்றனர். </p>
<p>மீளக்குடியமர்விற்காக அழைத்து வரப்பட்ட குடும்பங்களில் ஆண்கள் பலர் போரில் உயிரிழந்தனர். எஞ்சிய சிலரும் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர். எனவே குடும்பத்தின் உழைப்பிற்காக பெண்களே கூலி வேலைக்குச் செல்கின்றனர்.</p>
<p>இதனால் வீட்டில் பிள்ளைகளைப் பராமரிக்க யாருமற்ற நிலையில், அவர்களின் பிள்ளைகள் அனாதைகளைப் போல் இருக்கின்றனர். மேலும், அங்கு பள்ளிக்கூடம் இயங்காத நிலையில் பிள்ளைகள், அங்கிருந்து வெகு தொலைவில் அமைந்த திருவையாறு பிரதேசத்தில் உள்ள பள்ளிக்கு நடந்தே செல்கின்றனர். </p>
<p>இந்நிலையில், அவர்கள் நாய்களைப் போல நடத்தப்படுவதாகவும் சாப்பாட்டிற்கும் தண்ணீருக்கும் மற்றவர்களின் கைகளை எதிர்பார்த்து பிச்சைக்காரர்களைப் போல் விடப்பட்டுள்ளதாகவும் மக்கள் கண்ணீர் மல்க கூறினர். </p>
<p>இதற்குப் பதிலளித்த கூட்டமைப்பு எம்.பிக்கள், “சாந்தபுரம் மக்களுடைய பிரச்சினை உடனடியாக இலங்கை அரசால் முடிவடைகின்ற ஒரு பிரச்சனை இல்லை. சர்வதேச அளவில் இது குறித்து தெரியப்படுத்தியுள்ளோம். இதற்கான பிரதிபலன் விரைவில் தெரியவரும். அப்படி கிடைக்காத பட்சத்தில் நீதிமன்றத்தில் இதற்காக வழக்குத் தொடுத்து, நிச்சயமாக மக்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை பாடுபடுவோம் என்று அவர்கள் பதிலளித்துள்ளனர்.</p>
<p>மேலும், இப்பிரச்சினைக்குறிய அந்தப் பகுதியில் இடப்பெயர்விற்கு முன்பு வரை 765 குடும்பங்கள் இருந்துள்ளன. தற்போது 281 குடும்பங்கள் மீள்குடியமர்விற்காக அழைத்து வரப்பட்டுள்ளனர். </p>
<p>இந்நிலையில் அவர்களை மீள் குடியேற்றம் செய்ய இலங்கை இராணுவம் தடை விதித்து வருகின்றது. இந்தப் பகுதிகள் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அடங்குகினாலும், இதன் நிர்வாகச் செயற்பாடுகள் அனைத்தும் கிளிநொச்சி மாவட்டத்திற்குள் அடங்குகின்றனவாம். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43666</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>ஈழத் தமிழர் சிவந்தன் நடைப்பயணம் வைகோ வாழ்த்து</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43664</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43664#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 14:56:59 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[World News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43664</guid>
		<description><![CDATA[இலங்கைத் தமிழர்களை காக்கக் கோரியும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழிவின் பிடியிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காக்கவும், கொடூரக் கொலைகளைப் புரிந்த ராஜபட்ச கூட்டத்தை அனைத்துலக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இடையறாத போராட்டங்கள், கிளர்ச்சிகள், அனைத்து [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/vaiko34.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/vaiko34.jpg" alt="" title="vaiko" width="200" height="150" class="alignnone size-full wp-image-36257" /></a></p>
<p>இலங்கைத் தமிழர்களை காக்கக் கோரியும், போர்க்குற்றங்கள் தொடர்பாக அதிபர் ராஜபட்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக் கோரியும் பாரிஸ் நகரிலிருந்து ஜெனீவா நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஈழத் தமிழர் சிவந்தனுக்கு மதிமுக பொதுச்செயலர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.</p>
<p>இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அழிவின் பிடியிலிருந்து ஈழத்தமிழ் மக்களைக் காக்கவும், கொடூரக் கொலைகளைப் புரிந்த ராஜபட்ச கூட்டத்தை அனைத்துலக குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்கவும், உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இடையறாத போராட்டங்கள், கிளர்ச்சிகள், அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகின்ற வகையில் ஈழத்தின் வீரப்பிள்ளை சிவந்தன் பாரிஸ் பட்டணத்தில் இருந்து கால்நடையாகப் புறப்பட்டு சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அவையை நோக்கி நடைப்பயணத்தைத் தொடங்கிவிட்டார்.</p>
<p>பகலில் நெருப்பெனக் கொதிக்கும் வெயிலிலும், இரவில் ஊசிமுனையாகத் தைக்கும் கொட்டும் பனியிலும் தன்னைத்தானே வருத்திக் கொண்டு நடக்கிறார்.சிவந்தனின் பயணம் வெற்றிகரமாக நடைபெறவும் பயணத்தின் குறிக்கோள் ஈடேறவும், அவரது உடல்நிலை பாதிக்காத வகையில் இயற்கைத் தாய் துணை புரிய வேண்டும். தியாகப் பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43664</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பென்டகன் மீதான அல்கொய்தாவின் தாக்குதலே விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு காரணம்: கே.பி.</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43660</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43660#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 14:54:30 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43660</guid>
		<description><![CDATA[அமெரிக்காவின் பென்டகன் இரட்டைக் கோபுரம் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அல்கொய்தா இயக்கத்தினால் தாக்கப்பட்டமையே தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு பிரதான காரணம் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியுறவுத்துறை பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலின் பின்னர் அனைத்து மேற்கத்தேய நாடுகளும், அனைத்து நாடுகளினதும் போராட்டக்குழுக்களுக்கு எதிராக தமது முன்னெடுப்புகளை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/wtc1.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/wtc1.jpg" alt="" title="wtc" width="460" height="341" class="alignnone size-full wp-image-43662" /></a></p>
<p>அமெரிக்காவின் பென்டகன் இரட்டைக் கோபுரம் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் திகதி அல்கொய்தா இயக்கத்தினால் தாக்கப்பட்டமையே தமிழீழ விடுதலைப்புலிகளின் பின்னடைவுக்கு பிரதான காரணம் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். </p>
<p>அரசாங்கத்தின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் வெளியுறவுத்துறை பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார். </p>
<p>இந்த தாக்குதலின் பின்னர் அனைத்து மேற்கத்தேய நாடுகளும், அனைத்து நாடுகளினதும் போராட்டக்குழுக்களுக்கு எதிராக தமது முன்னெடுப்புகளை ஆரம்பித்ததுடன் போராட்டக்குழுக்கள் தொடர்பிலான கொள்கைகளையும் அவை மாற்றிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். </p>
<p>இந்த நிலையில் தமிழீழ விடுலைப்புலிகளுக்கான சர்வதேச உதவிகளையும் பெற்றுக் கொள்ள முடியாது போனதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். </p>
<p>இதற்கிடையில் உலகின் எந்த ஒருநாட்டிலும், தனி நாட்டு கோரிக்கை சாத்தியப்படாத ஒன்றாக இருப்பதாகவும் அந்த கருத்துக்கான வரவேற்பும் குறைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். </p>
<p>இதேவேளை, இறுதி யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தாம் தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ள அவர், தமிழீழ விடுதலைப்புலிகளின் சரணடைவு தொடர்பில் இதன் போது பேசப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p>
<p>எனினும் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இது தொடர்பில் விரைந்து இயங்கவில்லை எனவும், நிலைமை மிகவும் பாரதூரமாக சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். </p>
<p>இதற்கிடையில், வடமாகாண அபிவிருத்திகாக அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று அவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது. </p>
<p>இதற்கு பதில் வழங்கிய குமரன் பத்மநாதன், அதற்கான நிதிகள் திரட்டப்பட்டு வருவதாகவும், வடமாகாணத்தை முழுமையாக அபிவிருத்தி செய்வதற்கான நிதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். </p>
<p>தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கடந்த வருடம் மே மாதம் அறிவித்திருந்தது. அதனை முதலில் மறுதலித்த குமரன் பத்மநாதன் தலைவர் பத்திரமான இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாக ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். எனினும் சில நாட்களுக்கு பின்னர், அந்த கருத்தினை மாற்றி தலைவர் இறந்துவிட்டதாகவும், புதிய தலைவராக தாம் செயற்பட போவதாகவும் அறிக்கை விட்டிருந்தார். </p>
<p>இந்த நிலையில் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டு அரசாங்கத்தினால் தடுத்துவைக்கப்பட்டதாக கூறப்பட்டது. எனினும் அவர் சுதந்திரமாக நடமாடி வருவதாக எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றன. </p>
<p>இந்த நிலையில், குறித்த செவ்வியின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போதும், அமெரிக்காவின் பென்டகன் இரட்டைக் கோபுரம் மீதான தாக்குதல் தொடர்பிலும் புரிந்துகொள்ள தவறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43660</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இந்திய பிரிட்டன் வர்த்தகம் இரட்டிப்பாகும்&#8221;</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43657</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43657#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 14:47:41 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[World News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43657</guid>
		<description><![CDATA[பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இணைந்து முடிவெடுத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் பிரதமர் டேவின் கேமரனின் இரண்டு நாள் இந்தியப் பயணத்தின் முடிவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கலாச்சார ரீதியாக இரு நாடுகளும் நெருக்கமாக செயல்படுவதற்கான உடன்பாடு கையெழுத்தானது. அதன்பிறகு, இரு பிரதமர்களும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/kamarun.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/kamarun.jpg" alt="" title="kamarun" width="226" height="170" class="alignnone size-full wp-image-43658" /></a>  </p>
<p>பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு, பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இணைந்து முடிவெடுத்திருக்கிறார்கள்.</p>
<p>பிரிட்டிஷ் பிரதமர் டேவின் கேமரனின் இரண்டு நாள் இந்தியப் பயணத்தின் முடிவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, கலாச்சார ரீதியாக இரு நாடுகளும் நெருக்கமாக செயல்படுவதற்கான உடன்பாடு கையெழுத்தானது. </p>
<p>அதன்பிறகு, இரு பிரதமர்களும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டபோது, இரு நாடுகளும் மேலும் இணைந்து செயல்படுவது என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை இரு மடங்காக உயர்த்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்கள். கல்வி உள்ளிட்ட மற்ற துறைகளிலும், பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரம், பயங்கரவாதம் உள்ளிட்ட அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். </p>
<p>இந்தப் பயணம் தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக டேவிட் கேமரன் தெரிவித்தார். பின்னர் இரு தலைவ்ரகளும் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். பாகிஸ்தான் தொடர்பாக டேவிட் கேமரன் தெரிவித்த கருத்து எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என மன்மோகன் சிங்கிடம் கேட்டபோது, பாகிஸ்தான் இந்தியாவிடம் ஏற்கெனவே அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றி, இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத சக்திகளை ஒடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார். </p>
<p>அவர் மேலும் கூறுகையில், ஷஷபாகிஸ்தான் தனது மேற்கு எல்லையில் பயங்கரவாதத்தை ஒடுக்க எடுக்கும் நடவடிக்கைகளைப் போன்று இந்திய எல்லையை ஒட்டியும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். உலக சமுதாயம், இதை ஊக்குவிக்க உதவும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார் மன்மோன் சி்ங். </p>
<p>இதுபற்றி டேவிட் கேமரன் கூறும்போது, ஷஷபயங்கரவாத அச்சுறுத்தலை மட்டும் நாம் பார்க்கவி்ல்லை. அதன் தாக்கத்தை மும்பை தெருக்களில், லண்டன் தெருக்களில் பார்த்தோம். ஆப்கானிஸ்தானில் வாரந்தோறும் பலர் கொல்லப்படுகிறார்கள். அதை அனுமதிக்க முடியாது. பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதக் குழுக்கள், பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் உலக நாடுகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. பாகிஸ்தானுடன் இணைந்து அதை ஒடுக்க வேண்டும். லஷ்கர் இ தொயிபா, பாகிஸ்தான் தாலிபான், ஆப்கன் தாலிபான் என எதுவாக இருந்தாலும் ஒடுக்க வேண்டும்’’ என்றார் டேவி்ட் கேமரன். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43657</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எந்திரன் பாடல்கள் : நாளை முதல் கடைகளில்!</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43654</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43654#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 14:43:24 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[Cinema News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43654</guid>
		<description><![CDATA[எந்திரன் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ‘புதிய மனிதா’, ‘காதல் அணுக்கள்’, ‘அரிமா அரிமா’ ஆகிய பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ‘கிளிமஞ்சாரோ’ என்ற பாடலை பா.விஜய்யும் ‘இரும்பிலே ஒரு இருதயம்’, ‘பூம்பூம் ரோபாடா’ ஆகிய பாடலை கார்க்கியும் எழுதியுள்ளனர். இதுதவிர, ‘சிட்டி டான்ஸ் ஷோகேஸ்’ என்ற பாடலை ராப் பாடகர் யோகி. பி, பிரவிண் மணி, பிரதீப் விஜய் இணைந்து பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இதில் ரகுமானின் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/cd-1.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/cd-1.jpg" alt="" title="cd-1" width="300" height="300" class="alignnone size-full wp-image-43655" /></a></p>
<p>எந்திரன் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன. ‘புதிய மனிதா’, ‘காதல் அணுக்கள்’, ‘அரிமா அரிமா’ ஆகிய பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ‘கிளிமஞ்சாரோ’ என்ற பாடலை பா.விஜய்யும் ‘இரும்பிலே ஒரு இருதயம்’,  ‘பூம்பூம் ரோபாடா’ ஆகிய பாடலை கார்க்கியும் எழுதியுள்ளனர். இதுதவிர, ‘சிட்டி டான்ஸ் ஷோகேஸ்’ என்ற பாடலை ராப் பாடகர் யோகி. பி, பிரவிண் மணி, பிரதீப் விஜய் இணைந்து பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலுக்கும் வித்தியாசமான முறையில் இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இதில் ரகுமானின் மகள் கதிஜா, முதன் முறையாக ‘புதிய மனிதா’ என்ற பாடலை ரகுமான், எஸ்.பி.பியுடன் இணைந்து பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாடல் வெளியீடு நடக்கும் நாளை காலை முதல் உலகம் முழுவதும் பாடல் சிடி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43654</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எந்திரன் பாடல் வெளியீடு மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடு</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43651</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43651#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 14:41:37 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[Cinema News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43651</guid>
		<description><![CDATA[எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டுக்காக, மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் ‘எந்திரன்’. இதை சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வண்ணம், அதி நவீன தொழில் நுட்பத்துடன் படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி உள்ளார். [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/ent1.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/ent1.jpg" alt="" title="ent1" width="300" height="300" class="alignnone size-full wp-image-43652" /></a></p>
<p>எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டுக்காக, மலேசியாவில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கியிருக்கும் படம் ‘எந்திரன்’. இதை சன் நெட்வொர்க் தலைவரும் சன் பிக்சர்ஸ் அதிபருமான கலாநிதி மாறன் பிரமாண்டமாகத் தயாரித்துள்ளார். இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் கவரும் வண்ணம், அதி நவீன தொழில் நுட்பத்துடன் படத்தை இயக்குனர் ஷங்கர் உருவாக்கி உள்ளார். இதற்கான தொழில்நுட்ப பணிகள் மட்டும் வெளிநாட்டில் பல மாதங்கள் நடந்து வந்தது. இந்த படத்தின் பாடல்கள் நாளை மலேசியாவில் நடைபெரும் மாபெரும் வண்ணமிகு விழாவில் வெளியிடப்படுகிறது.</p>
<p>விழாவில், சீனாவை சேர்ந்த ஷாவ்லின் மாங்க்ஸ் பங்கேற்கும் அதிரடி சாகச சண்டை காட்சிகள் இடம்பெறுகிறது. இதில் சீன துறவிகள், மெய்சிலிர்க்க வைக்கும் பலவிதமான சாதனை சண்டை காட்சிகளை நடத்துகின்றனர். இந்த துறவிகள் இளம் வயதிலேயே குங்க்ஃபூ கலையை கற்றவர்கள். இவர்களின் இந்த நிகழ்ச்சிகள் உலக நாடுகளின் பிரபலமானது. அந்தரத்தில் பறப்பது, கூரிய வாள்களால் மோதுவது, அதில் படுத்துக்கொண்டு சாகசம் புரிவது, தலையால் பல செங்கல்களை உடைப்பது என சீன படங்களில் மட்டுமே பாத்திருக்க கூடிய இந்த சாகசங்கள் நேரடியாக விழா மேடையில் நடத்தப்பட இருக்கிறது.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43651</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சினிமாவை விட்டு விலகல்! மணிரத்னம் பரபரப்பு பேட்டி!</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43647</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43647#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 14:37:11 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[Cinema News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43647</guid>
		<description><![CDATA[சினிமாவை விட்டு விலகி கொடைக்கானலில் தங்கி கோல்ப் விளையாட விரும்புவதாக டைரக்டர் மணிரத்னம் கூறியுள்ளார். நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களை இயக்கியவர் டைரக்டர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் ராவணன் படம் ரீலிஸ் ஆகியிருக்கிறது. படத்தின் முதல் மூன்று நாட்கள் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் புக் ஆகிவிட்ட நிலையில் நான்காவது நாள் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/mania.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/mania.jpg" alt="" title="mania" width="300" height="250" class="alignnone size-full wp-image-43648" /></a></p>
<p> சினிமாவை விட்டு விலகி கொடைக்கானலில் தங்கி கோல்ப் விளையாட விரும்புவதாக டைரக்டர் மணிரத்னம் கூறியுள்ளார். நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, திருடா திருடா, பம்பாய், அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஏராளமான ஹிட் படங்களை இயக்கியவர் டைரக்டர் மணிரத்னம். இவரது இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தியில் ராவணன் படம் ரீலிஸ் ஆகியிருக்கிறது. படத்தின் முதல் மூன்று நாட்கள் தியேட்டர்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் புக் ஆகிவிட்ட நிலையில் நான்காவது நாள் ரிசல்ட் எப்படி இருக்கும் என்று பலரும் எதிர்பார்த்து வருகிறார்கள்.</p>
<p>இந்நிலையில் மணிரத்னம் அளித்துள்ள பேட்டி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராவணன் படத்தை ஆரம்பிக்கும் போதே, இதுதான் எனது கடைசி படம் என முடிவு செய்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகி, கொடைக்கானலில் செட்டிலாகும் எண்ணம் இருக்கிறது. அங்கே தினமும் கோல்ப் விளையாட ஆசை எனக்கு. இப்போது அடுத்த படம் என்ன என்ன? என்று எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள். எனக்கும் இன்னுமொரு படம் மட்டும் பண்ணலாம் என்றுதான் தோன்றுகிறது. பார்க்கலாம். ஆனால் அடுத்த படத்துக்கான ஐடியா எதுவும் என்னிடம் இல்லை. ராவணன் படத்துக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஆனால் அது படத்தைப் பாதிக்காது என்றுதான் நம்புகிறேன், என்று மணிரத்னம் தனது ‌பேட்டியில் கூறியுள்ளார்.</p>
<p>ஹிட் படங்கள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கும் டைரக்டர் மணிரத்னம் சினிமாவை விட்டு விலகக் கூடாது. தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு படமாவது இயக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43647</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>களவாணி வெற்றி எதிர்பார்த்ததுதான்! டைரக்டர் சற்குணம் பெருமிதம்!</title>
		<link>http://www.alaikal.com/news/?p=43644</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=43644#comments</comments>
		<pubDate>Fri, 30 Jul 2010 14:34:50 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[Cinema News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=43644</guid>
		<description><![CDATA[களவாணி படத்தின் வெற்றி நான் ஏற்கனவே எதிர்பார்ததுதான் என்று புதுமுக டைரக்டர் சற்குணம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், களவாணி எனது முதல் படம். எல்லோருக்குமே முதல் படம் என்றால் கொஞ்சம் பயம் இருக்கும். அதிலும் முதல் ஷாட் வைக்கும் நேரம் வரை ரொம்பவே டென்ஷனாக இருந்தது. இந்த படத்தில் என்னோடு ஒர்க் பண்ணுன எல்லோருமே என்னுடைய நண்பர்கள்தான். அதனால் டென்ஷன் இல்லாமல் படத்தை எடுக்க முடிஞ்சிது. இந்த கதை பண்ணி 8 வருஷம் ஆச்சி. இந்‌த [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/kalavani.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/kalavani.jpg" alt="" title="kalavani" width="300" height="250" class="alignnone size-full wp-image-43645" /></a></p>
<p> களவாணி படத்தின் வெற்றி நான் ஏற்கனவே எதிர்பார்ததுதான் என்று புதுமுக டைரக்டர் சற்குணம் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், களவாணி எனது முதல் படம். எல்லோருக்குமே முதல் படம் என்றால் கொஞ்சம் பயம் இருக்கும். அதிலும் முதல் ஷாட் வைக்கும் நேரம் வரை ரொம்பவே டென்ஷனாக இருந்தது. இந்த படத்தில் என்னோடு ஒர்க் பண்ணுன எல்லோருமே என்னுடைய நண்பர்கள்தான். அதனால் டென்ஷன் இல்லாமல் படத்தை எடுக்க முடிஞ்சிது. இந்த கதை பண்ணி 8 வருஷம் ஆச்சி. இந்‌த 8 வருஷம்ங்கிறது நல்லதாகத்தான் தெரியுது. ஒருவேளை நான் முன்னாடியே இந்த படத்தை இயக்கியிருந்தா&#8230; இந்த அளவுக்கு பண்ணிருக்க முடியுமான்னு தெரியல. லேட் ஆக லேட் ஆக ஸ்கிரிப்ட் மெருகு கூடிட்டே இருந்துச்சி. படத்தை பார்த்தவங்க எல்லாருமே பாராட்டுறாங்க. இரண்டரை மணி‌ நேர படமே இல்ல&#8230;. ஒன்றரை மணி நேரம்தான் இருக்கும்னு சொல்ற அளவுக்கு விறுவிறுப்பா படத்தை எடுத்திருக்கேன். மக்கள் விசிலடிச்சி கொண்டாடி பார்க்குற படமா களவாணி வந்திருக்குங்கிறது பெருமையா இருக்கு. தஞ்சாவூரே ஒரு அழகு. அந்த அழகை கொஞ்சமும் குறையாமல் திரையில் காட்டியிருக்கிறோம். தஞ்சாவூரோட கலாச்சாரம், பண்பாடை இலக்கியத்தில் நிறைய பதிவு பண்ணிருக்காங்க. சினிமாவில் அது பதிவு செய்யப்படவில்லைன்னு ஒரு குறை இருந்திச்சி. அந்த குறையை இந்த படம் போக்கிடுச்சின்னு நிறைய பேர் சொல்றாங்க.</p>
<p>படத்தோட நாயகன் கேரக்டரும் என்னோட தம்பி கேரக்டரும் ஒண்ணா இருக்கும். அவனோட கேரக்டரை வெச்‌சித்தான் படம் பண்ணிருக்கேன். அவன் வீட்டில் மிரட்டி பணம் வாங்குவான். நிறைய களவாணித்தனம் பண்ணுவான். அதைத்தான் எடுத்திருக்கேன். படம் எடுக்கும்போதே வெற்றி பெறும்னு நினைச்சேன். அதுமாதிரியே களவாணி மாபெரும் வெற்றி பெற்றிருக்கு. ரசிகர்கள் எல்லோருக்கும் நன்றியை தெரிவிச்சுக்கிறேன், என்று கூறியுள்ளார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=43644</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
