<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Alaikal</title>
	<atom:link href="http://www.alaikal.com/news/?feed=rss2" rel="self" type="application/rss+xml" />
	<link>http://www.alaikal.com/news</link>
	<description>Just another WordPress weblog</description>
	<lastBuildDate>Tue, 09 Feb 2010 11:26:47 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.1</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>ஜெனரல் சரத் பொன்சேகா கைது!</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31373</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31373#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 11:26:47 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[Other News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31373</guid>
		<description><![CDATA[முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான  ஜெனரல்சரத் பொன்சேகா நேற்றிரவு 9.30 மணியளவில் கைதுசேஜியப்பட்டார். அவரது கொழும்பு அலுவலகத்தை உடைத்துக் கொண்டு திடீரென உட் புகுந்த இராணுவத்தினர் அவரைத் தரதரவெனப் பிடித்து இழுத்து பலவந்தமாகக் கொண்டு சேன்றனர்.நாட்டின் மூத்த சில அரசியல்வாதிகளின் கண் முன்னால் இந்த அத்துமீறல் நட வடிக்கை அரங்கேறியது.
இராணுவக் குற்றங்களின் பேரில் அவர் இவ்வாறு கைதுசேஜியப்பட்டார் என இலங்கை இராணுவப் பிரிகேடியர்  பிரசாத்சமரசிங்கவை மேற்கோள்காட்டி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>முன்னாள் இராணுவத் தளபதியும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகப் போட்டியிட்டவருமான  ஜெனரல்சரத் பொன்சேகா நேற்றிரவு 9.30 மணியளவில் கைதுசேஜியப்பட்டார். அவரது கொழும்பு அலுவலகத்தை உடைத்துக் கொண்டு திடீரென உட் புகுந்த இராணுவத்தினர் அவரைத் தரதரவெனப் பிடித்து இழுத்து பலவந்தமாகக் கொண்டு சேன்றனர்.நாட்டின் மூத்த சில அரசியல்வாதிகளின் கண் முன்னால் இந்த அத்துமீறல் நட வடிக்கை அரங்கேறியது.</p>
<p>இராணுவக் குற்றங்களின் பேரில் அவர் இவ்வாறு கைதுசேஜியப்பட்டார் என இலங்கை இராணுவப் பிரிகேடியர்  பிரசாத்சமரசிங்கவை மேற்கோள்காட்டி ஊடகத்துறை அமைச்ஜ தகவல் வெளியிட்டது.<br />
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேறன் எம்.பி., ஜே.வி.பி.பியின் எம். பியான சுனில் ஹந்தன்நெத்தி அக்கட்சின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க ஆகியோருடன் எதிர்வரும் பொதுத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஜெனரல் பொன் சேகா பேசிக்கொண்டிருந்த சமயமே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது.</p>
<p>கொழும்பு, றோயல் கல்லூரிக்குப் பக்கத்தில் உள்ள ஜென ரல் பொன்சேகாவின் அலுவலகத்திலேயே இவ்விடயம் இடம் பெற்றது. இச்சம்பவம் இடம்பெற்று சுமார்  பதினைந்து நிமி டங்க ளில் பின்னர் சம்பவ  இடத்தில் இருந்த மனோகணேசன் எம்.பி. அதிர்ச்சியில் உறைந்த நிலையில் தகவல் வெளியிட்டார்.<br />
&#8220;நாங்கள் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான வியூகம் குறித்து ஜெனரல் பொன்சேகாவுடன் பேசிக்கொண்டிருந்த நேரம் திடீரென அலுவலகத்தை உடைத்துக் கொண்டு இராணுவத்தினர் புகுந்தனர் கேட்டுக் கேள்வியின்றி, ஜெனரல் பொன்சேகாவை தரதரவென  பலவந்தமாக  இழுத்துச் சென்றனர். முன்னர் &#8220;பயங்கரவாதிகள்&#8217; என்ற  பெயரில் சந்தேகநபரை இழுத்துச் செல்வதுபோல அவரைக் கொண்டு சென்றனர்.</p>
<p>நாம் அதை ஆட்சேபித்தோம். தடுக்க முடியவில்லை. சிவில் பொலிஸ் மூலம் கைதுசேஜியும்படி பொன்சேகா கூறியமையைக் கூட அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. சிவில் பொலிஸார் வராமல் தாம் வரமாட்டார் என்று ஜெனரல் பொன்சேகா கூறியதும் வந்திருந்த இராணுவத்தினர் பாஜிந்து கைகளிலும், கால்களிலும் அவரைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துச் சேன்றனர்.</p>
<p>இவ்வளவும் பொன்சேகாவின் அலுவலகத்தில் முதல் மாடியில் இடம்பெற்றன. இராணுவத்தினர் இழுத்துச் சேல்ல முயன்றபோது பொன்சேகா திமிறினார். இழுத்துச் சேன்ற படையினரில் ஒருவர் பொன்சேகாவின் பிடரியில் கைகளால் அடித்தமையைக் கூடக் கண்டேன்.</p>
<p>அவரைத் தரதரவென இழுத்துச் சேன்றசமயம் அவர் கால்களை உதறினார். அவரது கால்கள் பட்டு ஒரு ஜன்னல் கண்ணாடி கூட உடைந்தது. நாயை இழுத்துச் சேல்வது போல இழுத்துச் சேன்று கீழ் தளத்தில் வைத்து கைகளில் விலங்கிட்டு அவரைக் கொண்டு சேன்றனர். இராணுவத்தினர் நடந்துகொண்ட விதம் மிகமிகக் கேவலமானது. அநாகரிகமானது.</p>
<p>ஜெனரல் பொன்சேகாவுடன் அவரது ஊடகச் சேயலாளர் சேனக டி சில்வாவும் கைதுசேஜியப்பட்டுள்ளார்.<br />
பொன்சேகாவின் அலுவலகத்துக்குள் அத்து மீறி இராணுவத்தினர் பாய்ந்தபோதே எம்.பிக்களான எங்களின் மெய்காவலர்களின் ஆயுதங்களையும்  அவர்கள் பறித்துவிட்டனர்.</p>
<p>அவரை அங்கிருந்து கொண்டு சென்ற பின்னரும் சுமார் அரைமணிநேரம் அங்கிருந்து வெளியே விடாமல் எம்மை (மனோகணேசன்,ரவூப் ஹக்கீம், ஹந்துன்  நெத்தி, சோமவன்ஸ) இரணுவத்தினர் தடுத்த வைத்திருந்தனர் பின்னரே வெளியேற அனுமதித்தனர் இப்படி மனோகணேசன் எம்.பி. தெரிவித்தார்.</p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31373</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>குளறுபடிகளை ஒப்புவிக்கும் பொறுப்பை திணைக்களம் தட்டிக் கழித்து விடக்கூடாது கபே</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31370</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31370#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:18:36 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31370</guid>
		<description><![CDATA[
ஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணப்பட்ட முறைமையில் காணப்பட்ட குளறுபடிகளை ஒப்புவிப்பதற்கான பொறுப்பு மற்றும் கடமை உங்களுக்கும் திணைக்களத்திற்கும் உண்டு என்பதனை நீங்கள் தட்டிக்கழிக்க மாட்டீர்கள் என எமது நிறுவனம் நம்பிக்கை கொள்கின்றது என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அந்நிறுவனம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஜனாதிபதி தேர்தலில் வாக்கெண்ணப்பட்ட முறைமையில் குளறுபடிகள் காணப்பட்டதாக எதிர்க்கட்சிகள் உங்களுடைய திணைக்களத்திற்கு பல்வேறு வகையிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றன. 
இந்நிலையில்,வாக்கெண்ணும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/caffe3.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/caffe3.jpg" alt="" title="caffe" width="203" height="152" class="alignnone size-full wp-image-31371" /></a><br />
ஜனாதிபதித் தேர்தலில் வாக்கெண்ணப்பட்ட முறைமையில் காணப்பட்ட குளறுபடிகளை ஒப்புவிப்பதற்கான பொறுப்பு மற்றும் கடமை உங்களுக்கும் திணைக்களத்திற்கும் உண்டு என்பதனை நீங்கள் தட்டிக்கழிக்க மாட்டீர்கள் என எமது நிறுவனம் நம்பிக்கை கொள்கின்றது என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கமான கபே நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்கவிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அந்நிறுவனம் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:</p>
<p>ஜனாதிபதி தேர்தலில் வாக்கெண்ணப்பட்ட முறைமையில் குளறுபடிகள் காணப்பட்டதாக எதிர்க்கட்சிகள் உங்களுடைய திணைக்களத்திற்கு பல்வேறு வகையிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றன. </p>
<p>இந்நிலையில்,வாக்கெண்ணும் மத்திய நிலையங்களிலிருந்து வெளியான தேர்தல் பெறுபேறுகளின் காபன் பிரதிகளை பெற்றுக்கொள்வது குறித்து உங்களுக்கு கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டது. அது மட்டுமன்றி அவ்விடயம் தொடர்பில் தொலைபேசியிலும் கலந்துரையாடினோம். </p>
<p>ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளின் காபன் பிரதிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் கோரிக்கை விடுத்து ஒருவார காலம் கடந்து விட்டபோதிலும் உங்களிடமிருந்து எவ்விதமான பதில்களும் கிடைக்கவில்லை.</p>
<p>வாக்கெண்ணும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு கபே அமைப்பு அனுமதியை கோரியிருந்த போதிலும் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. அதனால் பெறுபேறுகளின் பிரதான ஆவணத்தை எம்மால் சோதனைக்கு உட்படுத்துவதற்கு இயலாமல் போய்விட்டது. </p>
<p>வாக்கெண்ணப்பட்ட முறைமையில் காணப்பட்ட குளறுபடிகள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் உங்களுடைய திணைக்களத்திற்கு பல்வேறு வகையிலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கின்றன. நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு நீங்கள் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் கபே நிறுவனம் விசுவாசத்துடன் இருந்தது.</p>
<p>எனினும் வாக்கெண்ணும் நடவடிக்கை மற்றும் அது தொடர்பிலான ஆவணங்கள் தொடர்பில் உங்களால் பின்பற்றப்பட்ட கொள்கையை எங்களுடைய நிறுவனத்தினால் சந்தேக கண் கொண்டே பார்க்க வேண்டியிருக்கின்றது. </p>
<p>வாக்கெண்ணப்பட்ட முறைமையில் காணப்பட்ட குளறுபடிகளை ஒப்புவிப்பதற்கான பொறுப்பு மற்றும் கடமை உங்களுக்கும் திணைக்களத்திற்கும் உண்டு என்பதனை நீங்கள் தட்டிக்கழிக்க மாட்டீர்கள் என்று கபே நிறுவனம் நம்புகின்றது </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31370</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சின்னங்கள் வேறாக இருப்பினும் நல்லாட்சியை ஏற்படுத்த ஐ.தே.க.வுக்கு ஆதரவு:ஜே.வி.பி கூறுகிறது</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31368</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31368#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:16:24 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[Other News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31368</guid>
		<description><![CDATA[
சின்னங்கள் வெவ்வேறாக இருப்பினும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் &#8216;யானை&#8217; சின்னத்தில் போட்டியிடுமாயின் ஜே.வி.பி. பெரும்பாலும் தனது சின்னமான &#8216;மணி&#8217; சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு குறித்து நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
&#8221; நடைபெறவுள்ள [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>
சின்னங்கள் வெவ்வேறாக இருப்பினும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் &#8216;யானை&#8217; சின்னத்தில் போட்டியிடுமாயின் ஜே.வி.பி. பெரும்பாலும் தனது சின்னமான &#8216;மணி&#8217; சின்னத்திலேயே போட்டியிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பி.யின் நிலைப்பாடு குறித்து நேற்று திங்கட்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில்,</p>
<p>&#8221; நடைபெறவுள்ள பாராளுமன்றத்தில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து இதுவரை இறுதியான முடிவு எதுவும் எடுக்கவில்லை. சகல கட்சிகளுடனும் குறிப்பாக பிரதான எதிர்க் கட்சியான ஐ.தே.க.வுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றன.</p>
<p>&#8216;யானை&#8217; சின்னத்தின் கீழ் ஒரு போதும் ஜே.வி.பி. போட்டியிடாது. அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி தனது சின்னத்தில் போட்டியிடுமாயின் ஜே.வி.பி. &#8216;மணி&#8217; சின்னத்திலேயே பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும்.</p>
<p>எவ்வாறாயினும் இறுதிக் கட்ட தீர்மானங்கள் எதுவும் இதுவரை எடுக்கவில்லை. எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க.வும் ஜே.வி.பி. யும் வெவ்வேறாக போட்டியிடும் நிலை ஏற்பட்டாலும் தேசிய செயற்பாடுகளில் ஓரணியாகவே செயற்படுவோம்.</p>
<p>எமது இலக்கு நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாத்து தற்போது காணப்படும் சர்வாதிகார ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதாகும் எனக் கூறினார்.திகார ரீதியிலான மாற்றங்களில் எமது அதிகாரிகளிடம் எதிர்பார்க்கப்படும் நடு நிலை தவறாமை நல்ல ஆளுகைக்கு பங்கம் விளைவிக்கும். </p>
<p>தேர்தலின் பின்னால் வேட்பாளர்கள் அவர்கள் ஆதரவாளர்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திய தகவல்துறையினர் அச்சுறுத்தப்படுவது துன்புறுத்தப்படுவது தீய பழக்கம். </p>
<p>தேர்தலுக்கு இரு தினங்களுக்கு முன் காணாமல் போன பத்திரிகையாளர் எக்னாலி கொட குறித்த தகவலை எதுவும் அறிய முடியாதுள்ளது. இவ்வேளையில் மிகுந்த கலவரத்தை உருவாக்கும் இந்த செய்தி குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். </p>
<p>அரசியல் பகிர்வு நல்ல அளுமை ஊடக சுதந்திரம், பொருளாதார அபிவிருத்தி, இல்லாமையினால் உள்ளவர்களுக்கு சமத்துவ உரிமை நடைமுறைப்படுத்தல், சுயாதீனமான நீதித்துறை, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றை எமது தேசம் எதிர்கொள்ளும் போது இப்படியானவற்றிற்கு நாம் கூட்டாக முன்னுரிமை கொடுத்து இன்றிலிருந்து கரிசனையுடன் செயல்பட வேண்டும். ஜனாதிபதியை அமைச்சரவையை எதிர்க்கட்சிகளை இந்த குறித்த இலட்சியங்களை நோக்கி செயல் நோக்குடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வற்புறுத்துகிறோம். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31368</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>கோஸ்டாரிகா நாட்டின் முதலாவது பெண் அதிபர்</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31365</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31365#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:15:08 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[World News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31365</guid>
		<description><![CDATA[
அமெரிக்கக் கண்டத்தில் கோஸ்டாரிகா நாடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் தேசிய விடுதலை கட்சியின் சார்பில் போட்டியிட்ட லாரா சின்சிலா வெற்றி பெற்றார். 
இதன் மூலம் கோஸ்டாரிகா நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவர் எதிர்வரும் மே மாதம் 8ஆந் திகதி புதிய அதிபராகப் பதவி ஏற்கிறார். 
50 வயதான இவர், அரசியல் அனுபவம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே இவர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/kostorica.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/kostorica.jpg" alt="" title="kostorica" width="300" height="150" class="alignnone size-full wp-image-31366" /></a></p>
<p>அமெரிக்கக் கண்டத்தில் கோஸ்டாரிகா நாடு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் தேசிய விடுதலை கட்சியின் சார்பில் போட்டியிட்ட லாரா சின்சிலா வெற்றி பெற்றார். </p>
<p>இதன் மூலம் கோஸ்டாரிகா நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். இவர் எதிர்வரும் மே மாதம் 8ஆந் திகதி புதிய அதிபராகப் பதவி ஏற்கிறார். </p>
<p>50 வயதான இவர், அரசியல் அனுபவம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏற்கனவே இவர் தற்போது அதிபராக இருக்கும் அரியாஸ் அமைச்சரவையில் மந்திரி உள்ளிட்ட பல பொறுப்பான பதவிகளை வகித்துள்ளார்.</p>
<p>புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சின்சிலாவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவர்கள் மத்தியில் அவர் பேசினார். </p>
<p>அப்போது, </p>
<p>&#8220;நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். வார்த்தகத்தை பெருக்க தீவிர முயற்சி மேற்கொள்வேன்&#8221; என்று உறுதி அளித்தார்.  </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31365</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழ் மௌனம் குறித்து மிகுந்த கவனம் எடுக்கவேண்டும் பேராயர்கள்</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31362</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31362#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:12:52 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31362</guid>
		<description><![CDATA[
தெற்கிலுள்ள வேட்பாளர்கள் இருவரும் தமிழ் மக்களின் துன்ப இயல்நிலை குறித்து கொடுத்த செய்தி அவர்களின் உரிமைகளுக்கு திருப்தி தராதபோது இத்தேர்தலில் அவர்கள் அதிக நம்பிக்கை காட்டவில்லை என்பதை அவர்களின் இந்த நடவடிக்கை காண்பிக்கலாம்.
அவர்களின் எதிர்பார்ப்புக்கள் எதுவும் கவனத்தில் எடுக்காததை அவர்கள் காட்டிய மௌனம் தெளிவாக்கியது.இவ்வாறு பேராயர்கள் அறுவர் கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, திருகோணமலை மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க ஆயர் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/lanka11.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/lanka11.jpg" alt="" title="lanka11" width="300" height="140" class="alignnone size-full wp-image-31363" /></a></p>
<p>தெற்கிலுள்ள வேட்பாளர்கள் இருவரும் தமிழ் மக்களின் துன்ப இயல்நிலை குறித்து கொடுத்த செய்தி அவர்களின் உரிமைகளுக்கு திருப்தி தராதபோது இத்தேர்தலில் அவர்கள் அதிக நம்பிக்கை காட்டவில்லை என்பதை அவர்களின் இந்த நடவடிக்கை காண்பிக்கலாம்.</p>
<p>அவர்களின் எதிர்பார்ப்புக்கள் எதுவும் கவனத்தில் எடுக்காததை அவர்கள் காட்டிய மௌனம் தெளிவாக்கியது.இவ்வாறு பேராயர்கள் அறுவர் கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>யாழ்ப்பாணம் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு கலாநிதி தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை, திருகோணமலை மட்டக்களப்பு ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை, மன்னார் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு கலாநிதி இராயப்பு யோசப் ஆண்டகை, குருநாகல் அங்கிலிக்கன் பிரதம ஆயர் அருள் பணி குமார இலங்கசிங்க ஆண்டகை, கொழும்பு அங்கிலிக்கன் ஆயர் அருள் பணி டூலிப் டி சிக்கேரா ஆண்டகை, அனுராதபுரம் ரோமன் கத்தோலிக்க ஆயர் பேரருட்திரு கலாநிதி றொபேட் அந்டராடி ஆண்டகை ஆகியோரே இந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளனர். </p>
<p>அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:</p>
<p>தமிழ் பிரதேசங்களில் வாக்களிக்காத அதிகமானோரின் மௌனம் குறித்து நாடு மிகுந்த கவனம் எடுக்க வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் இடம் பெயர்ந்தவர்கள் வாக்களிக்க முடியாமல் தடுக்கப்பட்டனர்.</p>
<p>எப்படி வாக்களித்தார்களென மதித்துப் பாராமல் தேர்தல் பிரசாரங்களில் நடந்த மூன்று மனப்பாங்குகளை இலங்கையர்கள் அநேகர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவை வருமாறு:</p>
<p>தேவையற்ற ஊடக பிரகடனங்களின் தூண்டுதலில் தனிப்பட்டவர் மேல் அவதூறுகள் தொடர்ந்து செய்தல். மக்கள் குரலுக்கு மெய்யான விடயங்களை அறிந்து கொள்ளும் தருணம் மறுக்கப்பட்டது. </p>
<p>தேர்தல் சட்டங்கள் வேண்டுமென்றே மீறப்பட்டமை கவலைக்குரியது. பிரசார நடவடிக்கைகளிற்கு அதிகளவிலான பணம் விரயம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொதுத் தேர்தலொன்றை நாம் அண்மிக்கும் போது விசேடமாக எமது அரசியல் தலைவர் மேற்கூறப்பட்ட மனப்பாங்குகளை சீர் திருத்தி, தாமே கட்டளைக் கோர்வை என்ற தமக்குள் ஏற்படுத்த வேண்டும். இந்த மாற்றத்திற்கான வாக்காளரின் விருப்பத் தேர்வு எமது அரசியல் கலாசாரத்திற்கான நல்ல நிலை மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த மாற்றம் மக்களின் இறைமையை உறுதிப்படுத்தும்.</p>
<p>பதவி உயர்வுகள், இடமாற்றங்கள் பதவி நிறுத்தங்கள் ஏன் இராணுவ, காவல்துறை, பொதுத்துறை அதிகாரிகளின் பதவி விலகல்கள், அரசியல் நடவடிக்கையின் சன்மானம், தண்டனை ஆகியனவற்றின் சில வழிமுறைகள் என்ற கவலை தருகின்றன. </p>
<p>பொதுநிர்வாகிகளின் திறமை பாராட்டப்பட்டு தமது கடமையை சிறப்பாக பணிபுரிந்தவர்கள் போற்றப்படல் வேண்டும்.</p>
<p>எனினும் ஒரு பொதுநிகழ்வின் உடனடியாக ஏற்படுத்தப்படும் அத்கார ரீதியிலான மாற்றங்களில் எமது அதிகாரிகளிடம் எதிர்பார்க்கப்படும் நடு நிலை தவறாமை நல்ல ஆளுகைக்கு பங்கம் விளைவிக்கும்.</p>
<p>தேர்தலின் பின்னால் வேட்பாளர்கள் அவர்கள் ஆதரவாளர்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திய தகவல்துறையினர் அச்சுறுத்தப்படுவது தீய பழக்கம்.தேர்தலுக்கு இரு தினங்களுக்குமுன் காணாமல் போன பத்திரிகையாளர் எக்னாலி கொட குறித்த தகவலை எதுவும் அறியமுடியாதுள்ளது. இவ்வேளையில் மிகுந்த கலவரத்தை உருவாக்கும் இந்தச் செய்தி குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.</p>
<p>அரசியல் பகிர்வு நல்ல ஆளுமை ஊடக சுதந்திரம், பொருளாதார அபிவிருத்தி, இல்லாமையினால் உள்ளவர்களுக்கு சமத்துவ உரிமை நடைமுறைப்படுத்தல், சுயாதீனமான நீதித்துறை, ஏழ்மை ஒழிப்பு ஆகியவற்றை எமது தேசம் எதிர்கொள்ளும் போது இப்படியானவற்றிற்கு நாம் கூட்டாக முன்னுரிமை கொடுத்து இன்றிலிருந்து கரிசனையுடன் செயல்பட வேண்டும்.ஜானாதிபதியை அமைச்சரவையை எதிர்க்கட்சிகளை இந்த குறித்த இலட்சியங்களை நோக்கி செயல் நோக்குடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வற்புறுத்துகிறோம் </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31362</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>விசா காலாவதியான பின்னர் தங்கியிருப்போர் தண்டனைக்குரியோர் பட்டியலில் சேர்க்கப்படுவர்</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31360</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31360#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:07:47 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[Other News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31360</guid>
		<description><![CDATA[விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தண்டனைக்குரியவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கான சட்டம் ஒன்றை கொண்டுவருவதென குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டதிகாரியும், விசாரணைப்பிரிவுத் தலைவருமான வில்லியம் தேவேந்திரராஜா தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா, வட அமெரிக்கா, சார்க் ஆகிய பிராந்தியங்களில்“ தேர்ந்தெடுக்கப்பட்ட 84 நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு வந்திறங்கியதும் விசா வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிலர் பிரதானமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருவோர் இந்த வசதியை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்று [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>விசா காலாவதியான பின்னரும் நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை தண்டனைக்குரியவர்கள் பட்டியலில் சேர்த்துக்கொள்வதற்கான சட்டம் ஒன்றை கொண்டுவருவதென குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டதிகாரியும், விசாரணைப்பிரிவுத் தலைவருமான வில்லியம் தேவேந்திரராஜா தெரிவித்துள்ளார்.</p>
<p>ஐரோப்பா, வட அமெரிக்கா, சார்க் ஆகிய பிராந்தியங்களில்“ தேர்ந்தெடுக்கப்பட்ட 84 நாடுகளிலிருந்து இலங்கை வருவோருக்கு வந்திறங்கியதும் விசா வழங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிலர் பிரதானமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளிலிருந்து வருவோர் இந்த வசதியை துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர் என்று தேவேந்திரராஜா தெரிவித்தார்.</p>
<p>இந்த 84 நாடுகளிலிருந்து வரும் பிரயாணிகளுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இங்கு வந்திறங்கியதும் 30 நாட்களுக்கு இலவச விசா வழங்கப்படுகிறது. பின்னர் அவர்களது நாடுகளைப் பொறுத்து ஒரு நியாயமான கட்டணத்தில் மொத்தம் இரண்டு மாதங்களுக்கு அல்லது 90 நாட்களுக்கு அவர்களது விசாக் காலம் நீடிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.</p>
<p>இத்தகைய வசதிகளுக்கு மத்தியிலும் பெருமளவிலான சுற்றுலா பயணிகள் சட்டத்தை மீறி இங்கு பணியாற்றிவரும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் ஆகியோரிடம் தற்காலிக அடிப்படையில் வேலைசெய்து வருகிறார்கள். சீனர்கள் வீதிகளில் அலைந்து திரிகிறார்கள் அல்லது கசினோ சு??தாட்ட கழகங்களில் சுற்றித் திரிகிறார்கள்.</p>
<p>இத்தகைய அத்துமீறல்களை கண்டுபிடிப்பதற்காக தமது தலைமையில் விசாரணை நடத்தியதாக தெரிவித்த தேவேந்திராஜா சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அல்லது நாட்டின் குடிவரவுச் சட்டங்களை மீறுவதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெற்றால் அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறினார்.</p>
<p>சட்டத்தை மீறுவோர் உடனடியாக நாடுகடத்தப்படுவது மட்டுமன்றி மீண்டும் அவர்கள் இந்நாட்டுக்குள் பிரவேசிக்க முடியாதபடி அவர்களது பெயர் தண்டனைக்குரியவர்களது பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் தேவேந்திரராஜா கூறினார். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்வதன் மூலம், ஒரு ஜனாதிபதி மன்னிப்பு முறைமையின் கீழ் மாத்திரமே இத்தகையோர் மேற்படி தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்  </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31360</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>எனது கணவர் கைதாகவில்லை கடத்தப்பட்டுள்ளார் : அனோமா பொன்சேகா</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31356</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31356#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:04:35 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31356</guid>
		<description><![CDATA[
எனது கணவர் கைதாகவில்லை; கடத்தப்பட்டுள்ளார் : அனோமா பொன்சேகா 
எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார். முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது&#8221; என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். 
ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். 
இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கலந்துகொண்டு கண்ணீருடன் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/sarathwife.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/sarathwife-200x300.jpg" alt="" title="sarathwife" width="200" height="300" class="alignnone size-medium wp-image-31357" /></a></p>
<p>எனது கணவர் கைதாகவில்லை; கடத்தப்பட்டுள்ளார் : அனோமா பொன்சேகா </p>
<p>எனது கணவர் கைது செய்யப்படவில்லை. கடத்தப்பட்டிருக்கிறார். முப்பது வருடகால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி ஒருவருக்கு அரசாங்கம் கொடுத்துள்ள சிறந்த பரிசு இது&#8221; என்று திருமதி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். </p>
<p>ஜெனரல் சரத் பொன்சேகா நேற்றிரவு இராணுவப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். </p>
<p>இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா கலந்துகொண்டு கண்ணீருடன் இவ்வாறு குறிப்பிட்டார்.</p>
<p>&#8220;எனது கணவர் எந்தவொரு தவறையும் செய்யாதவர். நாட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அவர் துரோகம் செய்ய எப்போதும் நினைத்ததில்லை. கைது செய்யப்படுவதாகக் கூறப்படுகின்ற போதும் எனக்கு இதுபற்றி அறிவிக்கப்படவில்லை&#8221; என திருமதி பொன்சேகா மேலும் தெரிவித்தார். </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31356</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு குறித்து ஐ.நா.வில் இன்று இலங்கை விளக்கம்</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31353</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31353#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 10:01:41 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31353</guid>
		<description><![CDATA[
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கு இன்று இலங்கை விளக்கம் அளிக்க உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று ஜெனீவா பயணமானதாக சம்பந்தப்பட்ட அமைச்சு தெரிவித்தது.
சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஐ. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/sri-un.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/sri-un.jpg" alt="" title="sri-un" width="300" height="140" class="alignnone size-full wp-image-31354" /></a></p>
<p>முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கு இன்று இலங்கை விளக்கம் அளிக்க உள்ளது.</p>
<p>ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று ஜெனீவா பயணமானதாக சம்பந்தப்பட்ட அமைச்சு தெரிவித்தது.</p>
<p>சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஐ. நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து உண்மை நிலைமையை தெளிவுபடுத்த உள்ளார்.</p>
<p>இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கில வாராந்தப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். </p>
<p>இந்தக் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பல்வேறு அழுத்தங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.இந்த நிலையில் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் நெதோனியோ குட்டரயையும் அமைச்சர் சந்தித்து உரையாட உள்ளார்.</p>
<p>தனது விஜயத்தின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அடுத்த மாத முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐ. நா. மனித உரிமை விசேட செயலமர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார்.</p>
<p>ஐ. நா. மனித உரிமை பேரவை விசேட செயலமர்வில் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பில் விவாதிக்கப் படலாம் என அறியவருகிறது. இந்த அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டு இலங்கை அரசாங்கம் சார்பாக உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.  </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31353</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பொன்சேகாவின் கைது சட்டவிரோதமானது  பிபிசியிடம் ரணில் கண்டனம்</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31350</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31350#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 09:59:18 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31350</guid>
		<description><![CDATA[
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. 
அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். 
மேலும், 
&#8220;சரத் பொன்சேகாவின் கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயல். 
அவர் கைது செய்யப்பட்டுள்ளதை நாம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/ranil111.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/ranil111.jpg" alt="" title="ranil11" width="300" height="150" class="alignnone size-full wp-image-31351" /></a></p>
<p>இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளரான ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்துள்ளது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு எதிரானது என்று கருத்து வெளியிட்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க. </p>
<p>அவரது கைது இராணுவச் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல நாட்டின் பொதுவான சட்டங்களுக்கும் எதிரானது என்றும் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிபிசி சந்தேஷ்யவிடம் தெரிவித்தார். </p>
<p>மேலும், </p>
<p>&#8220;சரத் பொன்சேகாவின் கைது என்பது நாட்டின் அரசியல் சாசனத்தை மீறும் ஒரு செயல். </p>
<p>அவர் கைது செய்யப்பட்டுள்ளதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இதுகுறித்து பலதரப்பினருடனும் நான் பேசி வருகின்றேன். அனைவரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர். </p>
<p>இது சில இராணுவ அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஜனநாயக விரோதச் செயல். அவர் மீது ஏதாவது குற்றசாட்டுக்கள் இருந்தால், அவை வழக்கமான நடைமுறைப்படி நீதிமன்றங்கள் முன்னால் விசாரிக்கப்பட வேண்டும். </p>
<p>அடிப்படை உரிமைகளை மீறும் செயல் </p>
<p>இராணுவச் சட்டங்களின் கீழ் இந்தச் செயல் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறுவதே சட்ட விரோதமானது. நடு இரவில் ஒருவரை கைது செய்வது என்பது அடிப்படை உரிமைகளை மீறும் ஒரு செயல். </p>
<p>ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நாட்டில் மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். உலகம் முழுவதிலுமிருந்து இதற்கு கண்டனம் எழுப்பப்படும். </p>
<p>ஓய்வு பெற்ற இராணுவத் தளபதியை இராணுவ நீதிமன்றத்தில் நிறுத்துவது முறையற்றது. </p>
<p>போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச விசாரணை வருமானால், சாட்சியம் அளிக்கத் தயார் என சரத் பொன்சேகா தெரிவித்தது கூட அவரது கைதுக்குக் காரணமாக இருக்கலாம்&#8221; என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிபிசியிடம் கருத்து வெளியிட்டுள்ளார் </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31350</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>சரத் கைது சர்வதேச சமுதாயம் டாக்டர் மகிந்தவை கண்டிக்கிறது</title>
		<link>http://www.alaikal.com/news/?p=31347</link>
		<comments>http://www.alaikal.com/news/?p=31347#comments</comments>
		<pubDate>Tue, 09 Feb 2010 09:56:56 +0000</pubDate>
		<dc:creator>Thurai</dc:creator>
				<category><![CDATA[News]]></category>

		<guid isPermaLink="false">http://www.alaikal.com/news/?p=31347</guid>
		<description><![CDATA[
சர்வதேச மன்னிப்பு சபை 
இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. 
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற சரத் பொன்சேகா நேற்றிரவு கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்துள்ள லண்டனை மையமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்பு சபை, தேர்தலுக்கு பின்னர் அரசியல் எதிர்க்கட்சியை உடைக்கும் அரசாங்கத்தின் செயலையே இது பிரதிபலிக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது. 
சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சேம் சாராபி இது தொடர்பில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://www.alaikal.com/news/wp-content/sarath1113.jpg"><img src="http://www.alaikal.com/news/wp-content/sarath1113.jpg" alt="" title="sarath11" width="300" height="150" class="alignnone size-full wp-image-31348" /></a></p>
<p>சர்வதேச மன்னிப்பு சபை </p>
<p>இலங்கையில் அரசியல் எதிர்கட்சியை உடைப்பதற்கான முதல்படியே சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கையாகும் என சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. </p>
<p>கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற சரத் பொன்சேகா நேற்றிரவு கைதுசெய்யப்பட்டமையைக் கண்டித்துள்ள லண்டனை மையமாகக் கொண்ட சர்வதேச மன்னிப்பு சபை, தேர்தலுக்கு பின்னர் அரசியல் எதிர்க்கட்சியை உடைக்கும் அரசாங்கத்தின் செயலையே இது பிரதிபலிக்கிறது எனச் சுட்டிக்காட்டியுள்ளது. </p>
<p>சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் சேம் சாராபி இது தொடர்பில் கருத்துரைக்கையில், சரத் பொன்சேகாவின் கைது தேர்தலுக்கு பின்னரான அடக்குமுறை எனக் குறிப்பிட்டுள்ளார். </p>
<p>இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேர்தல் வெற்றியின் பின்னர், தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக்கொண்ட பின்னரும் நாட்டின் மனித உரிமைகளை சிறந்தமுறையில் பேணவேண்டும் எனவும் பொன்சேகா மீது போர்க்குற்றங்கள் இருக்குமாயின் அதனை நியாயமான முறையில் விசாரணை செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.</p>
<p>ஐநா செயலாளர் பான் கீ மூன் </p>
<p>இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமையை அடுத்து அங்குள்ள அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் வன்முறைகளைக் கையாளக்கூடாது என ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். </p>
<p>சரத் பொன்சேகா கைதுசெய்யப்பட்டமை தொடர்பாக, செய்தியாளர்கள் பான் கீ மூனின் பேச்சாளரிடம் வினவியபோது, இந்த சம்பவத்தின் பின்னர் அமைதியைக் கடைப்பிடிப்பது நாட்டின் சமாதானத்திற்கும் இணக்கப்பாட்டுக்கும் முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார். </p>
<p>அத்துடன் தேர்தல் காலங்களில் மட்டுமன்றி ஏனைய காலங்களிலும் மக்கள் கோபமூட்டும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>அமெரிக்கா </p>
<p>முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவின் கைது, இலங்கையில் யுத்த மீட்சிக்குப் பின்னர் பாரிய பிளவுகளுக்கு வழியை ஏற்படுத்திவிடும் என அமெரிக்கா அச்சம் வெளியிட்டுள்ளது. </p>
<p>சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்துரைத்துள்ள, அமெரிக்க ராஜாங்க திணைக்கள பேச்சாளர் பிலிப் கிரௌலி, </p>
<p>&#8220;அமெரிக்கா இலங்கை நிலைமையை அவதானித்து வருகிறது. அத்துடன் இலங்கையின் சட்டங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளையும் உன்னிப்பாக அவதானிக்கிறது.</p>
<p>இலங்கை அரசாங்கம், சமூகத்தில் ஏற்படும் அமைதியின்மையைப் போக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை, இலங்கையின் சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். </p>
<p>இலங்கை அரசாங்கம், ஜனநாயக விழுமியங்களுக்கு இடம்கொடுக்க வேண்டும். பொதுத் தேர்தல் நடைபெறப் போகும் இச்சந்தர்ப்பத்தில், இந்த கைது நடவடிக்கை தேவையற்ற செயல்&#8221; என்றார். </p>
<p>சரத் பொன்சேகா, அமெரிக்க &#8216;கிரீன் கார்ட்&#8217; வதிவிட அனுமதியைக் கொண்டுள்ள நிலையில் இந்த கருத்தை அமெரிக்கா வெளியிட்டிருப்பது இலங்கையின் அரசியல் மட்டத்தில் விமர்சனங்களைக் கொண்டுவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.  </p>
]]></content:encoded>
			<wfw:commentRss>http://www.alaikal.com/news/?feed=rss2&amp;p=31347</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
