நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஐந்து படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். நடிகை அஞ்சலி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் ஐந்து படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் ஆரம்பத்தில் உடல் எடை அதிகமாகி பருமனாக இருந்தேன். இப்போது உடல் மெலிந்து இருக்கிறேன். எனது மெலிந்த தோற்றத்தை பார்த்து பலரும் அழகியாக மாறிவிட்டதாக பாராட்டுகிறார்கள். இந்த அதிசயம் எப்படி நடந்தது என்றும் கேட்கின்றனர். முதலில் தமிழ் படங்களில் குடிசை பகுதிகளில் இருக்கிற சாதாரண பெண் போன்ற கதாபாத்திரங்களில்தான் நடித்தேன். அதற்கேற்ற உடல் தோற்றம் எனக்கு இருந்தது. ஆனால் நிசப்தம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தபோது உடல் எடையை கணிசமாக குறைக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார். இதனால் கஷ்டப்பட்டு எடையை குறைத்தேன். ஒவ்வொரு…
தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். தனுஷ், ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான கிறிஸ் ஈவான்ஸ் மற்றும் லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்த ரயன் காஸ்லிங் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தை அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோனி, ஜோ ரூஸோ ஆகியோர் டைரக்டு செய்கிறார்கள். ஹாலிவுட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார். சமீபத்தில் சென்னை போயஸ் கார்டனில் கட்டும் தனது புதிய வீட்டுக்கு பூமி பூஜை போட்டு விட்டு ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காக தனுஷ் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் பங்கேற்று…
காணாமல் போன பெண்ணைத் தந்தையும், காதலனும், காவல்துறையும் தீவிரமாகத் தேடினால், உணர்வுபூர்வமான போராட்டத்துக்குப் பிறகு அதற்கான பதில் கிடைத்தால் அதுவே 'அன்பிற்கினியாள்'. சிவம் (அருண் பாண்டியன்) நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த தந்தை. எல்.ஐ.சி. ஏஜெண்டாகப் பணிபுரிகிறார். இவரது மகள் அன்பிற்கினியாள் (கீர்த்தி பாண்டியன்) செவிலியர் படிப்பு முடித்த பட்டதாரி. அம்மாவின் மருத்துவச் செலவுக்காக வாங்கிய கடனை அடைக்கும் பொருட்டு கனடா சென்று நர்ஸாகப் பணிபுரிய முயல்கிறார். அதற்காக ஐஇஎல்டிஎஸ் பயிற்சிக்குப் பகுதி நேரமாகச் செல்கிறார். பிறகு, மிகப்பெரிய மால் ஒன்றில் இருக்கும் சிக்கன் ஹப்பில் ஊழியராகப் பணிபுரிகிறார். இதனிடையே தந்தைக்குத் தெரியாமல் தன் காதலை ரகசியமாக வளர்த்து வருகிறார். ஒருநாள் மகளின் காதல் ரகசியம் காவல் நிலையத்தில் வெளிப்படுகிறது. இதனால் தந்தை அருண் பாண்டியன் மகள் மீது பாராமுகமாக இருக்கிறார். தந்தையின் புறக்கணிப்பு கீர்த்திக்கு வலியைக் கொடுக்கிறது.…
மோகன்லால் சரித்திர கதையம்சம் கொண்ட மரக்கார் அரபிக்கடலிண்டே சிம்ஹம் படத்தில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது. இதன் படப்பிடிப்பு கொரோனாவுக்கு முன்பே முடிந்து கடந்த வருடம் மார்ச் மாதம் திரைக்கு வர இருந்த நிலையில் ஊரடங்கால் முடங்கியது. நீண்ட தாமதத்துக்கு பிறகு வருகிற மே மாதம் இரண்டாவது வாரத்தில் படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் தற்போது அறிவித்து உள்ளனர். அதிக பொருட் செலவில் தயாராகி உள்ள இந்த படத்தில் அசோக் செல்வன், அர்ஜுன், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர், சுனில் ஷெட்டி, சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். 16-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் கடல் வழியாக இந்தியா வந்தபோது அவர்களை எதிர்த்து போராடிய குஞ்சலி மரைக்காயர் என்ற வீரரின் வாழ்க்கை கதையாக இந்த படம் தயாராகி உள்ளது. குஞ்சலி…
'த்ரிஷ்யம் 3' கதைக்காகக் குவிந்த மெயில்கள் தொடர்பாக ஜீத்து ஜோசப் வேண்டுகோள் விடுத்துள்ளார். 2013-ம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான 'த்ரிஷ்யம் 2' படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 'த்ரிஷ்யம் 3' தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் ஜீத்து ஜோசப் இ-மெயில் முகவரிக்கு 'த்ரிஷ்யம் 3' கதை தொடர்பாக தொடர்ச்சியாக இ-மெயில்கள் குவிந்து வந்துள்ளது. இதுதொடர்பாக ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: "நான் 'த்ரிஷ்யம் 3' படத்துக்கான கதையைத் தேடி வருவதாக சில நாட்களாக சமூக ஊடகங்களில் எனது மின்னஞ்சலுடன் ஒரு புரளி உலவி வருகிறது.…
தியேட்டர்களுக்கு பதிலாக புதிய படங்களை திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் வெளியிடும் போக்கு நீடிக்கிறது. சூர்யாவின் சூரரை போற்று, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள். கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன. அடுத்து யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள மண்டேலா படத்தையும் ஓ.டி.டி.யிலும், தொலைக்காட்சியிலும் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. மண்டேலா படத்தை மடோன் அஷ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தின் தயாரிப்பாளர் சசிகாந்த் ஏற்கனவே எடுத்த ஏலே படமும் தியேட்டர் அதிபர்களுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பானது. விரைவில் ஓ.டி.டி.யிலும் வருகிறது. தற்போது மண்டேலா படத்தையும் அதே பாணியில் வெளியிடுகிறார். யோகிபாபு கதாநாயகனாக நடித்த காக்டெயில் படம் ஏற்கனவே ஓ.டி.டி.யில் வெளியானது.
கார்த்தி ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமான ரகுல்பிரீத் சிங் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு. “சினிமாவில் என்னுடன்தான் எனக்கு போட்டி. இதற்கு முன்பு நடித்த படத்துக்கும், இப்போது நடிக்கும் படத்துக்கும் நடிப்பு ரீதியாக ஒருபடி மேல் ஏறி இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனதில் எப்போதும் இருக்கும். ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு அரங்குக்கு செல்ல பயந்தேன். படப்பிடிப்பில் எனக்கும் கொரோனா வந்தது. நான் பொதுவாக உணவிலும், ஆரோக்கியத்திலும் கவனமாக இருப்பதால் அதிகமாக மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் தனிமைப்படுத்தலில் இருந்தேன். யோகா பிராணயாம மூச்சு பயிற்சிகள் செய்தேன். இதனால் 12 நாட்களில் குணமாகி விட்டேன். கொரோனாவில் இருந்து குணமான பிறகு உடற்பயிற்சி செய்யும்போது உடல் வலி இருந்தது. கொரோனாவில்…
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன். நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி…
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் வயப்பட்டு தொடர்ந்து உறவை வளர்த்து வருகிறார்கள். இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டது என்றும், திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவி வந்தன. இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதை விக்னேஷ் சிவன் சூசகமாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இந்த மாத இறுதியில் திருமணம் நடக்க உள்ளதாகவும், திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாகவும் புதிய தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் விளக்கம் கொடுக்கப்படவில்லை. நயன்தாரா ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோரை காதலித்து தோல்வியில் முடிந்தது குறிப்படத்தக்கது. தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில்…
விஜய் நடித்த மாஸ்டர் படம் சமீபத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஓ.டி.டி. தளத்திலும் வெளியிட்டனர். தெலுங்கு, இந்தி, கன்னட மொழிகளிலும் வெளியாகி வெற்றி பெற்றது. பாகுபலி படத்தின் வசூல் சாதனையை மாஸ்டர் படம் முறியடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அடுத்த படத்தில் நடிக்க விஜய் தயாராகி உள்ளார். இந்த படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார். இது விஜய்க்கு 65-வது படம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வு நடக்கிறது. பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருவரிடமும் படக்குழுவினர் பேசி வருகிறார்கள். இதுகுறித்து பூஜா ஹெக்டே கூறும்போது, “நான் முதலில் தமிழ் படத்தில்தான் அறிமுகமானேன். எனவே தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. விஜய்யுடன் ஜோடியாக நடிக்க…