நயன்தாரா வாடகைத்தாய் யார்…! தெரிந்தது

நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் முடிந்த 4 மாதத்தில் இரட்டை குழந்தை பிறந்து இருப்பதாக அறிவித்தார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்திருப்பாரோ என்று யூகம் எழுந்தது.
இந்த நிலையில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல் பரவியது. இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாடகைத் தாய் மூலம் நினைத்ததும் யாரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது.
அதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் உள்ளன. அந்த விதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆஸ்பத்திரி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மருத்துவ பணிகள் துறை இயக்குனருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கப்படும் என்று கூறப்பட்டது.
இது தொடர்பாக அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினார்கள். ஆனால் விசாரணையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
சிகிச்சை மேற்கொண்ட ஆஸ்பத்திரியை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
வாடகைத் தாயாக உதவிய பெண்ணும் யார் என்று தெரிய வந்துள்ளது. கேரளாவை சேர்ந்த அந்த பெண் நயன்தாராவுக்கு உறவினர் என்று கூறப்படுகிறது. துபாயில் நயன்தாரா முதலீடு செய்துள்ள சில தொழில்களை அந்த பெண் தான் கவனித்து வருகிறாராம்.
அந்த நெருக்கமான தொடர்பின் மூலமாகவே வாடகைத் தாயாக சம்மதித்ததாக கூறப்படுகிறது. துபாய் பெண்தானே. இந்திய சட்டத்தால் நடவடிக்கை எடுக்க சாத்தியமில்லை என்று தகவல்கள் வெளியாகிறது. ஆனால் துபாயில் வாடகைத்தாய் குழந்தைக்கு அனுமதி இல்லை.
அந்த நாட்டு சட்டப்படி வாடகைத்தாய் என்பது தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செயல்படுவது கிரிமினல் குற்றமாக கருதப்படும். எனவே வாடகைத் தாயாக அந்த நாட்டில் செயல்பட்டு இருந்தாலும் அந்த பெண்ணுக்கும், சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிக்கும் சிக்கல்தான்.
இந்த நிலையில் அதிகாரிகள் இதுவரை விசாரணையில் தீவிரம் காட்டவில்லை. அவர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, செலிபிரிட்டியாக இருப்பதால் விசாரணை கொஞ்சம் தாமதமாவது உண்மைதான். ஆனால் விசாரிப்போம் என்றனர்.
இந்நிலையில் விதிமுறைகளை மீறியதாக நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தம்பதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார்.
இளைஞர்கள் மற்றும் சமூகத்திற்கு தவறான முன்னுதாரணமாக இவர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Related posts