என் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை

ஆடுகளம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நடிகை டாப்ஸிக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்கள் குவிந்து வருகின்றன. பிங்க் படத்தின் மூலம் அவருக்கு பாராட்டுக்கள் கிடைத்த நிலையில், கங்கனாவை விட இவர் வசம் அதிக நல்ல படங்கள் குவிந்தன. ஆனால், சமீப காலமாக டாப்ஸி நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே சரியாக ஓடவில்லை. இந்நிலையில், அவரது அடுத்த படம் டோபாரா வரும் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகிறது. தமிழில் ஜெயம் ரவியின் ஜன கன மன படத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இந்தியில் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள ‘டோபரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதனால் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் டாப்சி. அதில் ஒரு பகுதியாக ஒரு நிகழ்ச்சியில் டாப்சியிடம் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டாப்சி, “அந்த நிகழ்ச்சியில் பேசும் அளவிற்கு என் பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை” எனப் பதிலளித்துள்ளார். டாப்சியின் இந்த பதில் தற்போது பாலிவுட்டில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கரண் ஜோகர் நடத்தும் நிகழ்ச்சியில், பல முன்னணி திரை பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் டாப்ஸி இதுவரை கலந்துகொள்ளவில்லை.அந்த நிகழ்ச்சியில் பிரபலங்களிடம் அவர்களது பாலியல் வாழ்க்கை குறித்து எப்போதும் கரண் ஜோகர் கேள்வி எழுப்புவது வழக்கம். அவரது கேள்வி பாலிவுட்டில் பலமுறை சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts