சுமத்திரன் முன்வைத்த பிரேரணை தோற்கடிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் சுமத்திரன் முன்வைத்த நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஜனாதிபதியின் மீது திருப்தியின்மை தொடர்பான யோசனையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் ஜனாதிபதியின் மீது திருப்தியின்மை தொடர்பான யோசனை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts